Attorney Raza Mahroof

Attorney Raza Mahroof We are assist your legal representation

21 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு எங்களின் நிபந்தனைகளை ஈரான் ஏற்கவில்லை!அதனால் நாங்கள் வெளியேறுகிறோம் !- அமெரிக்க துணை...
12/04/2026

21 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு எங்களின் நிபந்தனைகளை ஈரான் ஏற்கவில்லை!

அதனால் நாங்கள் வெளியேறுகிறோம் !

- அமெரிக்க துணை அதிபர் JD VANCE

"இதுதான் கடைசி வாய்ப்பு!" - இஸ்லாமாபாத்தில் தொடங்கிய இறுதிச்சுற்றுப் பேச்சுவார்த்தை! 🇵🇰🇺🇸🇮🇷 ஏப்ரல் 12: "அமெரிக்காவின் அத்துமீறிய கோரிக்கைகள்" - தோல்வியின் விளிம்பில் அமைதி ஒப்பந்தம்!
"பாகிஸ்தானின் கடைசி முயற்சி! - மூடிய அறைக்குள் நடக்கும் முத்தரப்பு மோதல்!" 😱

உறவுகளே, நள்ளிரவைத் தாண்டியும் இழுபறியில் இருந்த இஸ்லாமாபாத் அமைதிப் பேச்சுவார்த்தை, இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் தொடங்கியுள்ளது. பாகிஸ்தான் அதிகாரிகளின் மத்தியஸ்தத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் தூதுக்குழுக்கள் ஒரு புதிய முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன! 🪖🛡️✨

📍 இன்றைய இறுதிச்சுற்றுப் பேச்சுவார்த்தையின் 4 முக்கியத் தகவல்கள்:

1️⃣ மீண்டும் மேசைக்கு வந்த தலைவர்கள்: 🤝🏛️
பாகிஸ்தான் அதிகாரிகளின் முன்னிலையில், அமெரிக்க மற்றும் ஈரானியத் தூதுக்குழுக்கள் இன்று மீண்டும் ஒருமுறை மேசைக்கு வந்துள்ளன. இது இந்தப் பேச்சுவார்த்தையின் மிக முக்கியமான மற்றும் நெருக்கடியான கட்டமாகும்!

2️⃣ அமெரிக்காவின் 'அத்துமீறிய கோரிக்கைகள்': 🛑📜
அமெரிக்கா தொடர்ந்து அதிகப்படியான மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத கோரிக்கைகளை முன்வைப்பதாக ஈரானின் 'தஸ்னிம்' (Tasnim) செய்தி நிறுவனம் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளது. இது அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதில் பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது!

3️⃣ ஈரானின் இறுதி வாய்ப்பு: ⏳⚠️
"அமெரிக்காவின் இந்தப் பிடிவாதமான போக்கைக் கருத்தில் கொண்டால், இந்தச் சுற்றுப் பேச்சுவார்த்தையில் ஒரு பொதுவான ஒப்பந்தத்தை எட்டுவதற்கு ஈரானியத் தூதுக்குழுவிற்குக் கிடைக்கும் கடைசி வாய்ப்பு இதுவாகவே இருக்கும்" என 'தஸ்னிம்' ஊடகம் எச்சரித்துள்ளது!

4️⃣ பாகிஸ்தானின் கடைசி முயற்சி: 🇵🇰🕊️
"இந்தப் பேச்சுவார்த்தையில் இருந்து ஒரு நல்ல முடிவைக் கொண்டுவரப் பாகிஸ்தான் எடுக்கும் இறுதி முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது" என ஈரானின் அரசு ஊடகம் (IRIB) தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் சமாதான முயற்சிகளுக்கும் இதுவே மிகப்பெரிய சோதனையாகும்!

⏳ இப்போதைய நிலை:
அமெரிக்கா தனது கோரிக்கைகளில் இருந்து இறங்கி வருமா அல்லது ஈரான் இந்த இறுதி வாய்ப்பையும் தூக்கி எறிந்துவிட்டு வெளியேறுமா என்பது அடுத்த சில மணி நேரங்களில் தெரிந்துவிடும். போர்நிறுத்தம் நீடிக்குமா அல்லது மீண்டும் போர் வெடிக்குமா என்ற உச்சக்கட்டப் பதற்றத்தில் உலக நாடுகள் உள்ளன! 🌍⏳📉🌑

"இஸ்ரேலிய ராணுவத் தளபதியின் போன் ஹேக்!" - ஈரானிய ஹேக்கர்களின் மெகா அதிரடி!ஏப்ரல் 9: "19,000 ரகசிய வீடியோக்கள் அவுட்!" - ...
09/04/2026

"இஸ்ரேலிய ராணுவத் தளபதியின் போன் ஹேக்!" - ஈரானிய ஹேக்கர்களின் மெகா அதிரடி!

ஏப்ரல் 9: "19,000 ரகசிய வீடியோக்கள் அவுட்!" - உலகையே உலுக்கும் 'Handala' குழுவின் கைவரிசை! 🚨📸💥

"உங்கள் ரகசிய அறைகள் இனி எங்களுக்குத் திறந்த புத்தகம்!" 😱

உறவுகளே, அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னணியில், இஸ்ரேலுக்கு ஒரு மிகப்பெரிய டிஜிட்டல் அடி விழுந்துள்ளது. இஸ்ரேலின் முன்னாள் ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்சி ஹலேவியின் (Herzi Halevi) கைபேசி மற்றும் கணக்குகளை ஈரானிய ஆதரவு ஹேக்கர்கள் ஊடுருவி, ஆயிரக்கணக்கான ரகசியத் தகவல்களைத் திருடியுள்ளனர்! 🪖🛡️✨

📍 'ஹண்டாலா' (Handala) ஹேக்கர் குழுவின் பகீர் தகவல்கள்:

1️⃣ 19,000 ரகசியக் கோப்புகள்: 📂🔓
"ஹெர்சி ஹலேவியின் மிக ரகசியமான கூட்டங்களில் இருந்து 19,000-க்கும் மேற்பட்ட ரகசிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைத் திருடியுள்ளோம்" என 'ஹண்டாலா' ஹேக்கர் குழு அறிவித்துள்ளது. இதில் ராணுவ மையங்களின் வரைபடங்கள் மற்றும் கிரிஸிஸ் ரூம் (Crisis Rooms) ரகசியங்களும் அடக்கம்!

2️⃣ அடையாள அட்டைகள் அம்பலம்: 🆔📸
தளபதி ஹலேவி மற்றும் அவரது மனைவியின் அடையாள அட்டைகள் (ID Cards), அவரது குடும்பப் புகைப்படங்கள் மற்றும் அவர் உடற்பயிற்சி செய்யும் காட்சிகள் என அனைத்தையும் ஹேக்கர்கள் இணையத்தில் கசிய விட்டுள்ளனர். இது இஸ்ரேலியப் பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய ஓட்டையாகப் பார்க்கப்படுகிறது!

3️⃣ யார் இந்த 'ஹண்டாலா'?: மர்மம்

சமீபத்தில் அமெரிக்காவின் FBI இயக்குநர் காஷ் படேலின் (Kash Patel) தனிப்பட்ட மின்னஞ்சல்களை ஹேக் செய்த அதே குழுதான் இது. முன்னாள் அமைச்சர்கள் யோவ் காவ்லண்ட், பென்னி காண்ட்ஸ் மற்றும் நப்தாலி பென்னட் ஆகியோரையும் இவர்கள் குறிவைத்துள்ளனர்!

🔥 இஸ்ரேல் உறுதிப்படுத்திய உண்மை:
இந்த புகைப்படங்கள் உண்மையானவைதான் என்பதை இஸ்ரேலியத் தரப்பு CNN செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியுள்ளது. தற்போது போர்நிறுத்தம் அமுலில் உள்ள வேளையில், இத்தகைய உயர்மட்டத் தகவல்கள் கசிந்திருப்பது இஸ்ரேலிய ராணுவ வட்டாரத்தில் பெரும் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது!

டிரம்ப் மரணமா??ட்ரம்ப் வால்டர் ரீட் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக சில அறிக்கைகள், சில ஊகங்கள் மற்றும் உறுதி ச...
05/04/2026

டிரம்ப் மரணமா??

ட்ரம்ப்
வால்டர் ரீட் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக சில அறிக்கைகள், சில ஊகங்கள் மற்றும் உறுதி செய்யப்படாத தகவல்கள் வருகின்றன.

தற்போது மருத்துவமனையைச் சுற்றி சாலைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி இன்று பொது மக்கள் முன் வரமாட்டார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

VIJAY  ❤️ STALIN 👍 EPS 😊 SINNAMMA 🌱
28/03/2026

VIJAY ❤️
STALIN 👍
EPS 😊
SINNAMMA 🌱

🇮🇷🇺🇸இரண்டு அமெரிக்க B-52H குண்டுவீச்சு விமானங்கள் தற்போது ஈரானை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. கசிந்த தகவல்களின்படி, ...
21/03/2026

🇮🇷🇺🇸இரண்டு அமெரிக்க B-52H குண்டுவீச்சு விமானங்கள் தற்போது ஈரானை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. கசிந்த தகவல்களின்படி, அவை அணு குண்டுகளை ஏற்றிச் செல்வதற்கு அதிக வாய்ப்புள்ளது. அந்த ஆரஞ்சு மனிதன் ஈரான் மீது அணு குண்டு வீச முயற்சிக்கும் முட்டாள்தனமான செயலைச் செய்யமாட்டான் என்று நம்புவோம்.
ஆபத்தை முகம் கொடுக்க காத்திருக்கும் அமெரிக்கா

20/03/2026
Nethanyahu எங்கே என்பதை மட்டும் என்னிடம் கேட்க வேண்டாம்!!இஸ்ரேலின் புதிய பிரதமர்
18/03/2026

Nethanyahu எங்கே என்பதை மட்டும் என்னிடம் கேட்க வேண்டாம்!!
இஸ்ரேலின் புதிய பிரதமர்

17/03/2026

இரானிய “ உடைய - வளைகுடாவின் கடைசி எச்சரிக்கை”

நேற்று இரவு, Supreme Leader Mojtaba Khamenei....

அவர் 12 நிமிடங்கள் ஈரான் மக்களிடம் உரையாற்றினார். இதுதான் அவரது முதலாவது ராஜ்ய அதிகா உரை. ஆனால் அந்த உரை உண்மையில் ஈரான் மக்களுக்காக இல்லை.

அவர் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் நேராக வாஷிங்டனை நோக்கியதாக இருந்தது.

முதல் ஆறு நிமிடங்களில், அவர் “அமெரிக்க குற்றங்களின் பட்டியலை” வாசித்தார்.

அவரது தந்தை Ali Khamenei மீது நடந்த தாக்குதல்,
ஈரானிய அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்ட சம்பவங்கள்,
பல தசாப்தங்களாக விதிக்கப்பட்ட பொருளாதார தடைகள்,
இஸ்ரேலுக்கு வழங்கப்பட்ட அமெரிக்க ஆதரவு,
அரபு நிலங்களில் அமெரிக்க இராணுவ தளங்கள். —

இவை அனைத்தும் ஈரானின் அரசியல் உரைகளில் பல ஆண்டுகளாகக் கேட்கப்பட்டவையே.

ஆனால் ?

ஏழாவது நிமிடத்தில் அவரது குரலும் கருத்தும் மாறின. அநீதிக்கு சவால் விட்ட குரலில் அதிகாரம் ஜரிகையிட்டது.

அவர் கடந்த காலத்தை விட்டுவிட்டு இப்பொழுது எதிர்காலத்தைப் பற்றி பேசத் தொடங்கினார்.அப்போது அவர் மூன்று கோரிக்கைகளை முன்வைத்தார்.

இந்த கோரிக்கைகளின் முழு உரை சுவிட்சர்லாந்து வழியாக அமெரிக்க வெளியுறவு துறைக்கு அனுப்பப்பட்டது.

பல ஊடகங்கள் “அமெரிக்கா மத்திய கிழக்கிலிருந்து வெளியேற வேண்டும்” என்று மட்டும் செய்தியாக வெளியிட்டன.
ஆனால் அது முழு உரையின் ஒரு பகுதி மட்டுமே.

உண்மையில் அவர் முன்வைத்த கோரிக்கைகள் மிகவும் கடுமையானவை.

கோரிக்கை 1
அமெரிக்காவின் அனைத்து இராணுவப்படைகளும்
ஈராக், சிரியா, குவைத், பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியாவிலிருந்து
30 நாட்களுக்குள் வெளியேறத் தொடங்க வேண்டும். அதுவும்
பேச்சுவார்த்தைக்கு பிறகு அல்ல.
இன்றிலிருந்து 30 நாட்களுக்குள்.

கோரிக்கை 2
1979 முதல் ஈரானுக்கு விதிக்கப்பட்ட அனைத்து அமெரிக்க பொருளாதார தடைகளும்
60 நாட்களுக்குள் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.

இதில்:
வங்கி கட்டுப்பாடுகள்
எண்ணெய் ஏற்றுமதி தடைகள்
தொழில்நுட்ப பரிமாற்றத் தடைகள்
எல்லாம் அடங்கும்.

கோரிக்கை 3
கடந்த நாற்பது ஆண்டுகளில் ஏற்பட்டதாகக் கூறப்படும் பொருளாதார இழப்புக்கு
அமெரிக்கா ஈடு தொகை (reparations) வழங்க வேண்டும்.

ஈரானின் கணக்குப்படி, “பொருளாதார போர்” காரணமாக
அவர்கள் 800 பில்லியன் டாலர் இழந்துள்ளனர். ஆனால்,
அவர்கள் கோரிய தொகை:
500 பில்லியன் டாலர்.
அது 10 ஆண்டுகளில் செலுத்தப்பட வேண்டும்.

இந்த கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டால்?

காமெனெய் மூன்று நடவடிக்கைகளை அறிவித்தார்.

நடவடிக்கை 1
30 நாள் காலக்கெடு முடிந்தவுடன்
Strait of Hormuz
அனைத்து வணிகக் கப்பல்களுக்கும் மூடப்படும்.
உலக எண்ணெய் போக்குவரத்தின் இதயம் அதுவே.

நடவடிக்கை 2
ஈரான்
Russia
மற்றும்
China
நாடுகளுடன் பாதுகாப்பு இராணுவ கூட்டணியில் சேரும்.
அதன் ஒரு பகுதியாக
ஈரான் நிலப்பரப்பில் ரஷ்யா மற்றும் சீனாவின் இராணுவ தளங்கள் உருவாகலாம்.

நடவடிக்கை 3
ஈரான் “முழுமையான அணு தடுப்பு திறன்” உருவாக்கும்.
அவர் நேரடியாக “அணு ஆயுதம் உருவாக்குவோம்” என்று சொல்லவில்லை. ஆனால்
“அதை பயன்படுத்தத் தயாராக இருப்போம்” என்ற வார்த்தையை அவர் மிகவும் கவனமாக பயன்படுத்தினார்.

ஏன் இந்த கடுமையான நிலை?

அதற்கான பதில் அதிகார அரசியலில் இருக்கிறது.

Mojtaba Khamenei
அவரது தந்தை Ali Khamenei நிழலில் அரசியலை அவதானித்து வளர்ந்தவர்.

அலி காமெனெய் பல தசாப்தங்கள்
ஈரானின் பல அரசியல் சக்திகளை சமநிலைப்படுத்தி ஆட்சி செய்தார்.
அவர்: உலக நாடுகளுடன்
பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்களது நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டார். அனைவருடனும்
சமரசம் செய்தார்.
நீண்டகால அரசியல் விளையாட்டை விளையாடினார்.

அப்படியான நெகிழ்வின் காரணமாக சக்தி வாய்ந்த இஸ்லாமிய நாடாக ஈரானை உருவாக்கினார்.

இந்த அரசியல் நடைமுறைகளையெல்லாம்
மோஜ்தபா அருகிலிருந்தே கவனித்து கற்றுக்கொண்டவர்.
ஆனால் அவரது நோக்கம் தெளிவானது.

மத்திய கிழக்கிலிருந்து அமெரிக்க தாக்கத்தை அகற்றுவது.

ஈரானின் இராணுவத்தை மீண்டும் கட்டியெழுப்புவது.

ஈரானின் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது.

ஈரானின் இஸ்லாமிய அரசை உலக வல்லரசுகளுடன் சமமான நாடாக உருவாக்குவது.

இஸ்லாமிய நீதி நெறியுடன் ஈரானை சர்வதேச அங்கீகாரம் பெற்ற நாடாக மாற்றுவது.

இப்போது, எண்ணெய் விலை $121 வரை உயர்ந்துள்ளது.

பென்டகான் ஆவணம் இந்த போரை வெல்ல முடியாது என்று எச்சரிக்கிறது.

China மற்றும் Russia வெளிப்படையாக ஈரானை ஆதரிக்கின்றன.

Strait of Hormuz மூடப்பட்டால் உலக பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்.

முக்கியமாக, தனது முழு உரையிலும் Mojtaba Khamenei
ஒருமுறையும் “பேச்சுவார்த்தை” என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை.

அவர் கேட்டது சமரசம் அல்ல.
அவர் கேட்டது நீதி.

அடுத்த 72 மணி நேரத்தை உலகம் கவனித்து பார்க்கிறது.

அமெரிக்கா ஈரானின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால்,
அது மத்திய கிழக்கில் அமெரிக்க ஆதிக்கத்தின் முடிவாக வரலாற்றில் எழுதப்படும்.

அமெரிக்கா அதை நிராகரித்து போரைத் தொடர்ந்தால்,
அது பல ஆண்டுகள் நீடிக்கும்,
அமெரிக்க பேரரசுக்கும் atgan ஆதரவு நாடுகளுக்கும் வெற்றி பெற முடியாத போரின் தொடக்கமாக நினைவில் கொள்ளப்படும்.

இது ஒரு சாதாரண வெளிநாட்டு கொள்கை சிக்கல் அல்ல.
இது உலக அதிகார அமைப்பு
மறுசீரமைக்கப்படும் தருணமாக இருக்கலாம்.
உலகம் எந்த திசையில் செல்லும் என்பதை இப்போது யாரும் உறுதியாக சொல்ல முடியாது.
ஆனால்
முழுமையான அமைதி திரும்ப வேண்டும் என்பதே மனிதகுலத்தின் உண்மையான விருப்பம்.

நீதி என்றால் ஈரானிய இஸ்லாமிய குடியரசு. அநீதி என்றால் அதிகார எதேச்சதிகாரம் இணைந்த இஸ்ரேலிய அமெரிக்கா பேரரசு.

உங்கள் தெரிவு எது.

(இதனை முடிந்தவரை பகிர்ந்து இந்த செய்திகளை மக்கள்மயப் படுத்த உதவுமாறு நண்பர்களிடம் பணிவுடன் வேண்டுகிறேன். )

Address

Main Street
Akkaraipattu
32400

Opening Hours

Monday 08:00 - 13:00
17:00 - 21:00
Tuesday 08:00 - 13:00
17:00 - 21:00
Wednesday 08:00 - 13:00
17:00 - 21:00
Thursday 08:00 - 13:00
17:00 - 21:00
Friday 08:00 - 11:45
Saturday 09:00 - 21:00
Sunday 08:00 - 21:00

Alerts

Be the first to know and let us send you an email when Attorney Raza Mahroof posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Attorney Raza Mahroof:

Share