மதி பத்திரம் எழுதுமிடம்

மதி பத்திரம் எழுதுமிடம் அனைத்து விதமான பத்திரங்களும் பிற்கா?

Happy PongaL to All.....
13/01/2022

Happy PongaL to All.....

இணைய தள பத்திர எழுத்தரின் பல கோரிக்ககைகளை அரசிடம் வலியுறுத்த முதற்கட்ட ஆலோசனை கூட்டம் தீர்மானங்களுடன் நிறைவுற்றது.
19/09/2021

இணைய தள பத்திர எழுத்தரின் பல கோரிக்ககைகளை அரசிடம் வலியுறுத்த முதற்கட்ட ஆலோசனை கூட்டம் தீர்மானங்களுடன் நிறைவுற்றது.

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சார்ந்த உரிம்ம் இல்லாத இணையதள பத்திர எழுத்தர்களின்  முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் ந...
18/09/2021

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சார்ந்த உரிம்ம் இல்லாத இணையதள பத்திர எழுத்தர்களின் முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் நாளை காலை 10 மணியளவில் சேலம் ஒருங்கினைந்த சார்பதிவாளர் அலுவலகம் அருகில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில்

1. சுமார் 1998 – ல் நிறுத்தப்பட்ட “ஆவண எழுத்தருக்கான – உரிமம் எண் “ வழங்குவதற்க்கான தேர்வினை நடத்த கோரியும்,



2. புதியதாக வரவிருக்கும் சட்டமான “ஆவண எழுத்தர் அல்லது வழக்கறிஞர் தயாரிக்கும் ஒவ்வொரு பத்திரத்திற்கும் சார்பதிவாளர் அலுவலகத்தில் நேரடியாக ஆஜராகி கைரேகை” பதிவு செய்யும் முறையினை திருத்தி அமைக்க கோரியும்.



என பலதரப்பட்ட விஷயங்களை இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதித்து இக்கருத்துக்களை அனைவரும் கைகோர்த்து ஒரு யூனியனாக அமைத்து அதன் மூலம் நமது தமிழக முதல்வர் மற்றும் பத்திர பதிவு துறை அமைச்சரிடம் சென்றடைய வழி அமைப்போம்.

இக்குழுவில் பல நபர்கள் பயணிக்காமல் உள்ளனர், எனவே தங்களுக்கு தெரிந்த இணையதள பத்திர எழுத்தர்களை இணைத்து குழு வலு பெற செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,

இணையதள பத்திர எழுத்தர் குழு

For Join group....pls click below link

WhatsApp Group Invite

05/08/2021
13/02/2021
தமிழக திருமணங்கள் பதிவு சட்டத்தில், திருமணம் நடக்கும் இடத்தின் எல்லைக்கு உட்பட்ட, சார் - பதிவாளர் அலுவலகத்தில் மட்டுமே, ...
02/01/2021

தமிழக திருமணங்கள் பதிவு சட்டத்தில், திருமணம் நடக்கும் இடத்தின் எல்லைக்கு உட்பட்ட, சார் - பதிவாளர் அலுவலகத்தில் மட்டுமே, திருமணத்தை பதிவு செய்ய முடியும்.

தற்போது

, திருமணம் நடந்த இடத்தில் உள்ள -- சார் பதிவகம், மணமக்கள் இருவரின் நிரந்தர வசிப்பிடம் அமைந்துள்ள, சார் - பதிவாளர் அலுவலகம் ஆகிய வற்றில், ஏதேனும் ஒன்றில், திருமணப் பதிவை மேற்கொள்ளலாம்.

30/09/2020

அலுவலகம் மாற்றப்பட்டது.

புதிய முகவரி:

பழைய சார்பதிவாளர் அலுவலகம் அ௫கில்,
கல்லாவி மெயின் ரோடு,
போச்சம்பள்ளி.
தொடர்புக்கு:
9659382385
மதி பத்திரம் எழுதுமிடம்
ஆவணம் தயாாிப்பவா் : ம. பிரதீப்

27/04/2020

த௫மபுாி சாா்பதிவகத்தில் பத்திரம் பதிவு செய்து தர எவரேனும் ஆவணம் எழுத்தா் இ௫ந்தால் தொடா்பு கொள்ளவும்.

அலைப்பேசி எண்: 9659382385

24/02/2020

பத்திரப்பதிவு சாட்சிகளுக்கு இன்று முதல் புது கட்டுப்பாடு

சென்னை:சொத்து விற்பனை உள்ளிட்ட பத்திரங்களை பதிவு செய்யும் போது, சாட்சியாக வருவோரின் புகைப்படம், கைரேகை பதிவு தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள், இன்று முதல் அமலுக்குவருகின்றன.

பத்திரப் பதிவின் போது, விற்பவர், வாங்குபவர் மற்றும் அவர்கள் தரப்பில், தலா ஒருவர் சாட்சியாக கையெழுத்திடவேண்டும்.சில சமயங்களில் விற்பவர் அல்லது வாங்குபவர் தரப்பில் யாரும் வராத நிலையில், ஆவண எழுத்தர், அலுவலக ஊழியர்கள் யாராவது, சாட்சியாக கையெழுத்திடுவர். வீடு, மனை விற்பனை தரகர்களும் சாட்சியாககையெழுத்து போடுவர்.

சார் - பதிவாளர் அலுவலகங்களில், இது போன்று சாட்சி கையெழுத்து போடுவதற்காகவே, சிலர் வலம் வருகின்றனர்.ஒரே நபர் தொடர்ந்து பல பத்திரங்களில் சாட்சியாக வருவது வாடிக்கை யாகி விட்டது. இது, மோசடிக்கு வழி வகுப்பதாக பதிவுத்துறை கண்டுபிடித்துள்ளது. அதனால், பத்திரப் பதிவுக்கான சாட்சிகள் தொடர்பாக கடைப்பிடிக்க வேண்டிய, புதிய கட்டுப்பாடுகளை, அரசுஅறிவித்துள்ளது.

கட்டுப்பாடுகள் விபரம்

*பத்திரங்களை பதிவு செய்யும் போது,சாட்சியாக வருவோரின் புகைப்படத்தையும், கைரேகை யையும் பதிவு செய்ய வேண்டும். சாட்சியாக வருவோரின் அடையாள ஆவணத்தையும், தெளிவாக ஆய்வு செய்ய வேண்டும்.

*ஒரே நபர், தொடர்ந்து ஆறு பத்திரங்களுக்கு மேல் கையெழுத்திட, சார் - பதிவாளர் அனுமதிக்கக் கூடாது.அவசியம் ஏற்பட்டால், மாவட்ட பதிவாளரிடம் அனுமதி பெற்ற பின், சம்பந்தப்பட்ட பத்திரத்தை பதிவு செய்ய வேண்டும்.

இந்த புதிய கட்டுப்பாடுகள், இன்று முதல் அமலுக்கு வருகின்றன.

Source : Dinamalar

பத்திர நகல் [Certified Copy]நாம் எழுதி பதிவு செய்யும் பத்திரங்களை அனைத்து சார்பதிவகத்திலும் ஒரு எண் குறிப்பிட்டு அதனை ஸ்...
17/10/2019

பத்திர நகல் [Certified Copy]

நாம் எழுதி பதிவு செய்யும் பத்திரங்களை அனைத்து சார்பதிவகத்திலும் ஒரு எண் குறிப்பிட்டு அதனை ஸ்கேன் செய்து பரமாரித்து ஒரிஜினல் ஆவணங்களை பதிவு செய்வரிடம் திரும்ப அளித்து விடும் . அவ்வாறு பரமாரிப்பு செய்யப்படும் ஆவணங்களை நம் தேவை ஏற்படும் போது விண்ணப்பத்து பெற்றுக்கொள்ளலாம். 2019ம் ஆண்டுக்கு முன்னர் பத்திர நகல்களை பெற வேண்டுமென்றால் பத்திரம் எழுதுபவரிடோமோ அல்லது சார்பதிவகத்திற்கோ செல்ல வேண்டி நிலை இருந்தது. கடந்த 2018ம் ஆண்டில் டிசம்பர் 11ம் தேதியில் தமிழ்க அரசால் கொண்டு வந்த ஆணைப்படி அன்றிலிருந்து பத்திர நகல்களை நாம் இணையதளத்தில் இருந்தே பெறலாம் என்ற புது முயற்சி கொண்டு வந்து பொதுமக்களின் சிரமத்தை குறைத்து பெற்றிக்கரமான பாதையே நோக்கி சென்று கொண்டியிருக்கிறது. நாம் இணையதளத்தில் நகலுக்கான கட்டணங்களை செலுத்தி விண்ணப்பித்து ஒன்று அல்லது இரண்டு நாட்களில் சார்பதிவாளரால் “Digital Signature” இட்டு வழங்கப்படும் நகலின் “Soft Copy” யை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நகலின் முக்கியத்துவம் :

#நீங்கள் வாங்ககூடிய சொத்தின் பத்திரத்தில் ஏதேனும் அடித்தல் திருத்தல் இருந்தால் அதன் மெய் தன்மையை அறிய



· # நீங்கள் வாங்கும் நபருக்கு அச்சொத்து எதனடிப்படையில் பாத்தியம் என்ற விவரத்தையும், முன்னதாக கைமாறி இருக்கும் நபருக்கு ஏதேனும் வாரிசுதாரர்கள் பிரச்சனைகள் உள்ளதா என்பதை அறிய உதவும். ஏனென்றால் நீங்கள் வாங்கக்கூடிய நபர் அந்த பிரச்சனையை சமாளிக்க முடியாமலும் அச்சொத்தை விற்க முற்படலாம்.



· # வங்கி கடன் பெற விரும்புகீறிர்கள் என்றால் உங்கள் சொத்திற்கு Legal Opinion பெறவும்,



· # கூட்டுக்குடும்ப சொத்துகளின் பற்றிய வழக்குகள் நீதிமன்றத்தில் இருக்கும்பொழுது அதன் மெய்தன்மையை அறியவும்



· # நமது பக்கத்து வீட்டுக்காரர் அல்லது நிலத்துக்காரர் சண்டை முனைப்புடன் நமது சொத்துக்களை உரிமை கோரும் பொழுது அவர்களின் சொத்தை நிருபணம் செய்து பிரச்சனைகளை தவிர்க்கவும்



· # ஆள் மாறட்டங்களை கண்டுபிடிக்கவும் தேவைப்படும்.


குறிப்பு;

நகல் பெற தேவையானவை :


பத்திர எண் மற்றும் பதிவு செய்த வருடம்.


பத்திர எண் தொரியாதவர் அச்சொத்திற்கான சார்பதிவகம், கிராமம், புல எண் விவரம் தேவை.

குறிப்பு :.

2005 ம் ஆண்டிலிருந்து மட்டுமே கணினிமயமாக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் கணினி மயமாயக்க நடவடிக்கை எடுத்துக்கொண்டியிருக்கின்றனர்.



தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து சார்பதிவகத்திலும் 2005 ம் ஆண்டியிலிருந்து நகல் விண்ணப்பத்து பெற்று தரும் சேவையை செய்து வருகிறோம். விண்ணப்ப கட்டணம் + Rs. 150 (Service Charge). விண்ணப்ப கட்டணம் செலுத்தும் தொகையின் இரசீதினையும், நகலினையும் உங்களின் இ மெயிலிற்கு அனுப்பி வைக்கப்படும்.



“ அலைச்சலை குறைப்பீர், நேரம் மற்றும் பணத்தை சேமீப்பீர் “.

தொடர்புக்கு:..

Mathi Registration Services

(மதி பத்திரம் எழுதுமிடம்)

உரிமை : ம.பிரதீப் மதி.

Mobile : +91 – 9659382385

+91 – 9385357960

Address

Kallavi Main Road, Pochampalli
Uthangarai
635206

Telephone

+91 96593 82385

Website

Alerts

Be the first to know and let us send you an email when மதி பத்திரம் எழுதுமிடம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to மதி பத்திரம் எழுதுமிடம்:

Share

Category