மக்கள் உரிமைகள் சட்டம் அறிவோம்

  • Home
  • India
  • Pudukkottai
  • மக்கள் உரிமைகள் சட்டம் அறிவோம்

மக்கள் உரிமைகள் சட்டம் அறிவோம் அடிப்படை சட்ட விழிப்புணர்வு ASTROLOGER

முகநூல் நண்பர்கள், அனைவருக்கும் அடியேனின், இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்....   நன்றி....
30/10/2024

முகநூல் நண்பர்கள், அனைவருக்கும் அடியேனின், இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.... நன்றி....

தங்களது பகுதிகளில், நண்பர்கள், உறவினர்களின் குழந்தைகள் மாணவ/மாணவிகள் வறுமை காரணமாக தொடக்க கல்வி மற்றும் கல்லூரி மற்றும் ...
29/10/2024

தங்களது பகுதிகளில், நண்பர்கள், உறவினர்களின் குழந்தைகள் மாணவ/மாணவிகள் வறுமை காரணமாக தொடக்க கல்வி மற்றும் கல்லூரி மற்றும் இதர மேல்படிப்பினை தொடர இயலாத ஏழை குடும்பங்களுக்கு இந்த தகவலை தெரியப்படுத்தி கல்வியினை தொடர உதவி செய்ய கேட்டுக்கொள்கிறேன். எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்... என்றால் கல்வி கற்க உதவியவன் கடவுள் ஆவான்.

வறுமை காரணமாக கல்வியை தொடர முடியாத மாணவர்களின் விவரத்தை 80561 34333 அல்லது 98418 91000 என்ற எண்ணுக்கு தெரிவிக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த எண்களை வகுப்பறை கரும்பலகைகளில் எழுதிப்போடும்படியும் கூறியுள்ளார் நடிகர் சூர்யா.

AGARAM FOUNDATION

முடிஞ்சா பகிருங்க ஒரு பத்து பேருக்கு உதவியா இருக்கும்

நாம் ரகசியமாக ஒரு காரியத்தைச் செய்தால் யாருக்குத் தெரியப்போகிறது என்று நினைத்துக்கொண்டு தனி அறையிலோ, தனி இடத்திலோ ஒரு கா...
14/10/2024

நாம் ரகசியமாக ஒரு காரியத்தைச் செய்தால் யாருக்குத் தெரியப்போகிறது என்று நினைத்துக்கொண்டு தனி அறையிலோ, தனி இடத்திலோ ஒரு காரியத்தைச் செய்கிறோம்.

ஆனால், இந்துமதம் என்ன சொல்கிறது என்றால் நீங்கள் செய்யும் எதுவுமே ரகசியம் அல்ல!!

ஏனெனில் ஒன்பது பேர் எப்போதும் உங்களைக் கண்காணிக்கிறார்கள்; அந்த ஒன்பது சாட்சிகளை மீறி எதையும் செய்ய முடியாது.

யார் அந்த ஒன்பது பேர்!?

பஞ்ச பூதங்களான நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம்(வெற்றிடம்);
இது தவிர சூரியன், சந்திரன்,யமன், காலம்(நேரம்).

பஞ்சபூதம் என்று சொல்லிவிட்டாலேயே எல்லாம் அடங்கிவிடும். இருந்த போதிலும் சூரியனும், சந்திரனும் நன்கு தெரிந்த பிரகாசமான பொருள் என்பதால் அதைச் சேர்த்தனர். அல்லது இரவும் பகலும் — 24 மணி நேரமும்– என்று பொருள் கொள்ளவும்

அவை உதவும். யமன் என்பவன் யார்? அவனுடைய கணக்குப்பிள்ளை சித்திர குப்தன் என்பர் இதன் பொருள் என்ன வென்றால்

நாம் செய்யும், நாம் நினைக்கும் ஒவ்வொரு விஷமும் ஒரு சித்திரத்தை — படத்தை உருவாக்குகிறது. அந்தப் படம் நமக்குத் தெரியாமல் (குப்த=ரகசியமாக) இருக்கிறது.

இந்த விஞ்ஞான உண்மையையே இந்துக்கள் ‘சித்திர’‘குப்த’ என்றனர். ஒரு கொசு நீரில் உட்கார்ந்தால் கூட நீரில் அதிர்ச்சி ஏற்பட்டு வளையங்கள் உண்டாகும். ஆனால் நமக்கு கண்ணுக்குத் தெரியாது. அது கொசுவுக்குத் தெரியும். ஒரு எறும்பு ஊர்ந்து சென்றால்கூட ஒரு வழித்தடம் உண்டாகும். அது நமக்குத் தெரியாது. எறும்புக்கு அந்தப் பாதை தெரியும்.

அதுபோல நாம் எண்ணும் ஒவ்வொரு எண்ணமும் ஒரு படத்தை உண்டாக்கும்; அது நமக்குத் தெரியாது; சித்திரகுப்தன் அல்லது யமனுக்குத் தெரியும். சித்திரகுப்தன் அல்லது யமன் என்பவன் ஒரு சூப்பர் கம்ப்யூட்டர். நம்முடைய எல்லா நல்ல, கெட்ட செயல்கள், எண்ணங்கலையெல்லாம் கூட்டிக் கழித்து பாவ புண்ணியங்களைப் பட்டியல் போட்டுவிடுவர்.

நீர், நெருப்பு, ஆகாயம் முதலியன இல்லாத இடமே இல்லை. அவர்கள் நம்மைக் கவனிக்கிறார்கள் என்பதைச் சொல்லத் தேவையே இல்லை.

இந்துக்களுத் தான் இந்த விஞ்ஞான உண்மைகள் தெரியும். இதுவரை வேறு யாருக்கும் அது தெரியாது. நீரை மந்த்ரம் மூலம் அனுகுண்டாக மாற்றும் வல்லமை நம் ரிஷி முனிவர்களுக்கு இருந்தது. ஒரு உள்ளங்கை நீரை மந்திரம் மூலம் சாபமாகவோ வரமாகவோ மாற்றும் அரிய வித்தை அவர்களுக்கு மட்டுமே தெரியும்.

இதனால்தான் பெண்ணைக் கல்யாணம் செய்துகொடுத்தாலும், தானங்களை செய்தாலும் நீரைப் பயன்படுத்தினர். சாபம் கொடுக்கவும் வரம் கொடுக்கவும் நீரைப் பயன்படுத்தினர்.

நெருப்பு என்பது இல்லாமல் மனிதன் முன்னேறமுடியாது. உடம்பிலுள்ள அக்னி ஜடராக்னி. வெளியே உள்ள அக்னி சாட்சியாக திருமணம் செய்துவிட்டால் அதை மீறக்கூடாது. பழைய அரசர்கள் அக்னி சாட்சியாக உடன்படிக்கை செய்ததை நமது கல்வெட்டுகள் கூறுகின்றன. அக்கினி சாட்சியாக கோவலன் – கண்ணகி திருமணம் செய்து கொண்டதை தமிழ் காப்பியம் சிலப்பதிகாரம் சொல்லும்.

நீர் ஆறாக ஓடும்படி தாரைவார்த்து தானம் செய்ததை சங்க இலக்கியம் செப்பும். காலம் (நேரம்) என்பது நம்மைக் கவனிக்கிறது. அதை நிறுத்த யாராலும் முடியாது. கடிகாரம் ஓடிக்கொண்டிருபாது போல ஒவ்வொன்றும் கணக்கிடப்படுகிறது.

இந்துக்கள் சொன்ன ஒன்பது கர்ம சாட்சிகளிலிருந்து தப்பிக்க யாராலும் முடியாது!!!

ஆகவே ஒன்பது சாட்சிகளுக்குப் பயந்து நாம் அனைவரும்
நல்ல காரியங்களையே செய்ய வேண்டும்;
நல்ல காரியங்களையே எண்ண வேண்டும்.🌹

Address

பொன்னமராவதி
Pudukkottai
622407

Website

Alerts

Be the first to know and let us send you an email when மக்கள் உரிமைகள் சட்டம் அறிவோம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category