மக்கள் இலவச சட்ட உதவி மையம்

  • Home
  • India
  • Madurai
  • மக்கள் இலவச சட்ட உதவி மையம்

மக்கள் இலவச சட்ட உதவி மையம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from மக்கள் இலவச சட்ட உதவி மையம், Lawyer & Law Firm, 11, KNM Plaza, MARUTHU PANDIYAR STREET, KK NAGAR, Madurai.

" மக்கள் இலவச சட்ட உதவி மையம்"

UPLIFTT MADURAI (Reg No 207/2024)

அறக்கட்டளையின் கீழ் இயங்கும் ஒரு நிறுவனமாகும்..

சட்ட உதவி அடிப்படை உரிமை என்பதனை மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம்..

 #வாய்தா_என்றால்_என்னநீதிமன்ற வாய்தா பற்றி மக்களுக்கு தெரிந்தவை.பொதுவாக மக்களுக்கு நீதிமன்றத்தில் வழங்கப்படும் வாய்தா பற...
25/08/2025

#வாய்தா_என்றால்_என்ன

நீதிமன்ற வாய்தா பற்றி மக்களுக்கு தெரிந்தவை.

பொதுவாக மக்களுக்கு நீதிமன்றத்தில் வழங்கப்படும் வாய்தா பற்றி எப்படி தெரியும் எதுவரைக்கும் தெரியும் என்றால் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அந்த வழக்கை விசாரிக்காமலோ அல்லது அடுத்த விசாரணைக்காகவோ ஒத்தி வைப்பது வாய்தா (Postpone) என்று யாராவது சொல்லி கேட்டு தெரிந்திருக்கும்.

அதை பற்றி இன்று முழுமையாக தெரிந்து கொள்வோம்.

நீதிமன்றத்தில் வாய்தா வழங்கும் நடைமுறை எந்த சட்டத்தின் அடிப்படையாக செயல்படுகிறது.

நீதிமன்றத்தில் வாய்தா வழங்கும் நடைமுறை எந்த சட்டத்தின் அடிப்படையாக செயல்படுகிறது என்றால் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 309 ன் அடிப்படையில் தான் செயல்படுகிறது.

பிரிவு 309. நடவடிக்கைகளைத் தள்ளி வைப்பதற்கு அல்லது ஒத்தி வைப்பதற்கான (பிரிவு 309 – Power to postpone or adjourn Proceedings)
அந்த பிரிவில் கூறப்பட்டது என்னவென்றால்.

1).நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருக்கும் அனைவரையும் விசாரித்து முடிக்கும் வரையில் ஒவ்வொரு வழக்கு விசாரணையையும் அடுத்தடுத்த நாள் தொடர்ந்து விசாரிக்க வேண்டும்.

பரிசிலனை அல்லது விசாரணை ஒவ்வொன்றிலும் நடவடிக்கைகளை எவ்வளவு விரைவாக நடத்துவது சாத்தியமோ அவ்வளவு விரைவாக அவை நடத்தப்படுதல் வேண்டும்.

மற்றும் குறிப்பாக சாட்சிகள் விசாரணை ஒரு முறை துவங்கிவிட்டதும் அடுத்து வரும் நாளுக்கு அப்பால் அந்த நடவடிக்கைகளை ஒத்தி வைப்பது அவசியமாக இருக்கிறது என்பதாகப் பதிவு செய்யப்பட வேண்டிய காரணங்களுக்காக நீதிமன்றம் முடிவுக்கு வந்தாலன்றி முன்னிலையாகியுள்ள சாட்சிகள் அனைவரையும் விசாரித்து முடியும் வரை அன்றாடம் அந்த விசாரணை தொடர்ந்து நடத்தப்படுதல் வேண்டும்.

(குறிப்பாக : இ.த.ச. பிரிவுகள் 376 முதல் 376D வரையிலான கீழ்ஓர் குற்றம் தொடர்பில் விசாரணை அல்லது வழக்கு விசாரணை இருக்கும்போது , சாட்சிகள் விசாரணை தொடங்கப்பட்ட தேதியிலிருந்து இரு மாத கால அளவுக்குள் இயன்றவரை வழக்கு விசாரணை முடிக்கப்படுதல் வேண்டும்.

இது புதிதாக சட்ட எண்- 13/2013 ன் படி இணைக்கப்பட்டு 3.2.2013 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.)

( 2 ) நீதிமன்றம் குற்றமொன்றை விசாரணைக்கெடுத்துக் கொண்டதற்குப் பின்பு அல்லது விசாரணை எதையும் துவக்குவதைத் தள்ளி வைப்பதோ ஒத்தி வைப்பதோ அவசியமானது அல்லது உசிதமானது. என்னும் முடிவுக்கு வருமானால் அது தான் பொருத்தமென நினைக்கும் நிபந்தனைகளின் பேரில் பதிவு செய்யப்பட வேண்டிய காரணங்களுக்காக நியாயமானதெனத் தான் எண்ணும் காலத்திற்கு அவ்வப்போது அந்தப் பரிசீலனை அல்லது விசாரணையைத் தள்ளிவைக்கலாம் அல்லது ஒத்தி வைக்கலாம் மற்றும் எதிரி காவலிலிருப்பாரானால் கட்டளை ஒன்றின் மூலமாக மீண்டும் அவரைக் காவலில் வைக்கலாம்.

வரம்புரையாக நடுவர் எவரும் எதிரியை ஒரு சமயத்தில் பதினைந்து நாள்களுக்கு மேற்பட்ட காலத்திற்கு இந்தப்பிரிவின்படி காவலுக்கு அனுப்புதல் ஆகாது .

மேலும் வரம்புரையாக சாட்சிகள் முன்னிலையாயிருக்கும்போது எழுத்து மூலமாகப் பதிவு செய்யப்பட வேண்டிய சிறப்புக் காரணங்களுக்காக அல்லாமல் அவர்களை விசாரிக்காமல் ஒத்திவைப்பதற்கோ தள்ளிவைப்பதற்கோ அனுமதிக்கப்படுதல் ஆகாது.

இன்னும் வரம்புரையாக எதிரிக்கு எதிராக விதிக்கப்படவிருக்கும் தண்டனை குறித்து காரணம் கோருவதற்கு எதிரியினை இயல்விக்கும் நோக்கத்திற்காக மட்டும் வழக்கை ஒத்திப் போடுதல் என்பது கூடாது.

நீதிமன்ற வழக்கை ஒத்தி வைப்பது அவசியமானது என்று நீதிமன்றம் கருதினாலொழிய மற்றபடி வழக்கை நீதிமன்றம் ஒத்தி வைக்கக்கூடாது.
அவ்வாறாக நீதிமன்றம் ஒத்தி வைத்தால் அதற்கான காரணத்தை நீதிமன்றம் பதிவு செய்ய வேண்டும்.

( a ) சூழமைவுகள் அந்த தரப்பினரின் கட்டாள்கைக்கு அப்பாற்பட்டு இருந்தால் தவிர தரப்பினரின் வேண்டுகோளின்படி தள்ளிவைப்பு வழங்கப்படாது .

( B ) வழக்குத் தரப்பினரின் வழக்குரைஞர் வேறொரு நீதிமன்றத்தில் இருப்பதன் காரணத்தின் பேரில் தள்ளிவைப்பதற்கு அடிப்படை ஆகாது.

( c ) சாட்சி ஒருவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருக்கும் போது வழக்குத் தரப்பினரின் வழக்கறிஞர் வழக்கு விசாரணைக்கு வராதபோதும் அல்லது வழக்கு விசாரணைக்கு வழக்குத் தரப்பினரோ அல்லது வழக்குத் தரப்பினரின் வழக்கறிஞரோ வந்திருந்தும் சாட்சியை விசாரிக்கவோ அல்லது குறுக்கு விசாரணை செய்யவோ தயாராக இல்லாதபோதும் நீதிமன்றம் தான் பொருத்தமெனக் கருதும் நிலையில் சூழலுக்கேற்ப முதல் விசாரணை அல்லது குறுக்கு விசாரணையை தவிர்த்து சாட்சியிடமிருந்து வாக்குமூலத்தைப் பதிவு செய்து ஒரு உத்தரவைப் பிறப்பிக்கலாம்.

1).எதிரி குற்றமொன்றைச் செய்திருக்கக் கூடும் என்பதான சந்தேகத்தை எழுப்புவதற்குப் போதுமான சாட்சியம் கிடைத்திருந்து அவரைக் காவலில் வைப்பதனால் மேற்கொண்டும் சாட்சியம் கிடைக்கலாம் என்பதாகத் தோன்றுமானால் இது மீண்டும் காவலில் வைப்பதற்கு நியாயமான காரணமாகும்.

2).ஒத்தி வைக்கும் முன்னோ , தள்ளி வைக்கும் முன்னோ போடப்படும் நிபந்தனைகளில் வாதி தரப்பு அல்லது எதிரி உரிய சந்தர்ப்பங்களில் செலவுத் தொகையைச் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையும் ஒன்றாகும் .

அதாவது வழக்கை ஒத்தி வைக்கும் சூழ்நிலையில் அந்த வழக்கை ஒத்தி வைக்க யார் காரணமோ அவர்கள் மீது உரிய சந்தர்ப்பங்களில் வழக்கு செலவுத் தொகையை செலுத்த உத்தரவிடலாம்.....

- Madurai Manzil
மக்கள் இலவச சட்ட உதவி மையம்

"கடன் பெறுவது தொடர்பாக மத்திய அரசின் புதிய அறிவிப்பு " சிபில் ஸ்கோர் கட்டாயம் அல்ல ......
25/08/2025

"கடன் பெறுவது தொடர்பாக மத்திய அரசின் புதிய அறிவிப்பு "

சிபில் ஸ்கோர் கட்டாயம் அல்ல ......

 #காவல்_துறையினர் விசாரனையின் போது காவல் நிலையத்தில் வைத்து பொதுமக்களை அடிக்கலாமா?👇👇👇👇👇👇   அப்படி அடித்தால் அவர்களின் மீ...
04/08/2025

#காவல்_துறையினர் விசாரனையின் போது காவல் நிலையத்தில் வைத்து பொதுமக்களை அடிக்கலாமா?

👇👇👇👇👇👇

அப்படி அடித்தால் அவர்களின் மீது நாம் எந்த பிரிவின் கீழ் வழக்கு தொடர முடியும்??

🙏🙏🙏🙏🙏

காவல் துறையினர் மட்டுமல்ல வேற எந்த ஒரு அரசு துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் பொதுமக்களை அடிக்கும் உரிமை இல்லை...

குற்றம் செய்தவரை தண்டிக்கும் உரிமை நீதிமன்றத்திற்கு மட்டுமே உள்ளது....

அவ்வாறு அடித்தால் கீழ்காணும் இந்திய தண்டனை சட்டப் பிரிவின் கீழ் அவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடர முடியும்....

IPC – 166 : ஒருவருக்கு கேடு விளைவிக்கும் நோக்கத்துடன் சட்டத்தின் செயல்பாடுகளை மீறுதல் .

IPC – 330 : ஒப்புதலை பெறுவதற்கு தன்னிச்சையாக காயம் விளைவித்தல்.

IPC – 357 : சட்ட விரோதமாக அடைத்து வைக்க முயலும் போது தாக்குதல்.

IPC – 321 : வேண்டுமென்றே தன்னிச்சையாக காயம் விளைவித்தல்.

IPC – 322 : வேண்டுமென்றே தன்னிச்சையாக கொடுங்காயம் விளைவித்தல்.

IPC – 324 : ஆயுதங்கள் மூலம் காயம் விளைவித்தல்.

IPC – 307 : கொலை முயற்சி.

மேலும் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்களை அடித்தால் அது மனித உரிமை மீறல் செயலாக கருதி அவர்களின் மீது வழக்கு தொடர்ந்தால் அவர்களின் பதவி பறிபோகும் நிலையும் ஏற்பட வாய்ப்புள்ளது....

இதைப் போன்று யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் காவல்துறையின் மீது வழக்கு தொடர தேவை இருப்பின் தொடர்பு கொள்ளவும் .....

மக்கள் இலவச சட்ட உதவி மையம்
080150 06235
மதுரை

10/01/2025
*லீகல் நோட்டீஸ் : வக்கீல் தேவையில்லை* பொதுவாக லீகல் நோட்டீஸ் என்றாலே, அது வக்கீல் மூலமாக அனுப்பப்படும் நோட்டீஸ் என்றே நா...
08/01/2025

*லீகல் நோட்டீஸ் : வக்கீல் தேவையில்லை*

பொதுவாக லீகல் நோட்டீஸ் என்றாலே, அது வக்கீல் மூலமாக அனுப்பப்படும் நோட்டீஸ் என்றே நாம் நினைக்கிறோம். அது தவறு. அதாவது எதிர் தரப்பினர் மீது, அவரது செயலுக்கு எதிப்பு தெரிவித்து எடுக்கப்படக்கூடிய சட்ட நடவடிக்கை பற்றிய அறிவிப்பு கடிதம் தான் அது. அதை நாமே அனுப்பலாம். நமக்கு அது பற்றிய விபரம் தெரியாத பட்சத்தில், வழக்கறிஞர் மூலமாக அனுப்பவேண்டும்.

நமது நாட்டு சட்டப்படி, வழ்க்கு தொடுப்பவர் ( Petitioner / Complainant) மற்றும் எதிர் தரப்பினர் ( Opposite Party ) -தான் வழக்கு நடவடிக்கையில் நேரடியாக ப்ங்கேற்க வேண்டும். அது சட்டம் நமக்கு வழங்கியிருக்கும் உரிமை. இதில் வழ்க்கு தொடுப்பவருக்கோ அல்லது எதிர் தரப்பினருக்கோ போதுமான சட்ட அறிவு இல்லாத நிலையில் வழ்க்கறிஞர் மூலமாக செய்ய வேண்டும்.

பொதுவாக லீகல் நோட்டீஸ் என்பது, நாம் அனுப்பும் நோட்டீஸ் மற்றும் வழக்கறிஞர் மூலம் அனுப்பப்படும் நோட்டீஸ் , இவை இரண்டையுமே குறிப்பிடும் சொல்லாகும். வழக்கறிஞர் மூலம் அனுப்பப்படும் நோட்டீஸ் அட்வகேட் நோட்டீஸ் / லாயர் நோட்டீஸ் ஆகும்.

*லீகல் நோட்டிஸ் தயாரிப்பது எப்படி?*

உதாரணத்திற்கு நீங்கள் ஒரு வாஷிங் மிஷின் வாங்கியிருக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அத்ற்கு ஒரு வருட உத்திரவாதம் உற்பத்தியாளரால் வழ்ங்கப்பட்டுள்ளது என வைத்துக்கொள்வோம். வாங்கிய ஒரு சில நாட்களி லேயே அது பழுதடைந்து விடுகிறது. நீங்கள் எந்த கடைக்காரரிடம் வாங்கினீர்களோ, அவரிடம் புகார் செய்கிறீர்கள். அவர் அங்கீகாரம் பெற்ற சர்வீஸ் டீலராக இருந்தால் அவரே பழுது பார்த்து கொடுப்பார். அப்படி இல்லை என்றால் கம்பெனியின் சர்வீஸ் செண்டர் முகவரியை தருவார். அங்கு புகார் செய்கிறீர்கள். அவர்கள் பழுது பார்த்து த்ருகிறார்கள். மறுபடியும் குறுகிய காலத்தில் பழுது ஏற்படுகிறது. மீண்டும் பழுது பார்க்கப்படுகிறது. பழுதடைவது தொடர்கிறது . இதனால், உங்களால் தொடர்ச்சியாக மிஷினை பயன்படுத்தாத நிலை. இந்நிலை யில், உங்களுக்கு விற்பனை செய்யப்பட்ட பொருள் தரம் குறைந்தது அல்லது உற்பத்தியில் குறைபாடுள்ள பொருள் (Manufacturing Defect) என கருதுகிறீர்கள். அதனால் அந்த மிஷினுக்கு பதில் வேறு மிஷின் தருமாறு கேட்க்கிறீகள். கம்பெனிக்கரர்கள் அவ்விதம் செய்ய மறுக்கிறார்கள். அதனால் கன்ஸ்யூமர் கோர்ட்டில் வழக்கு தொடர போகிறீர்கள். இப்பொழுது நீங்கள் செய்ய வேண்டியது என்ன? அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.

இந்த விஷயத்தில், விற்பனையாளரை பொறுத்த வரையில் அவர் மீது எவ்வித தவறும் கிடையாது. எனவே வழக்கில் அவரை எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டிய அவசியம் கிடையாது. சேர்த்தாலும் தவறு கிடையாது.

லீகல் நோட்டீஸ்

BY REGISTERD POST WITH A/D, OR BY FAX OR E-MAIL

அனுப்புநர்: ( இது உங்கள் முகவரி)

பெறுநர்:

அங்கீகரிக்கப்பட்ட டீலர் முகவரி

சட்ட பூர்வ அறிவிப்பு.

தங்கள் நிறுவன தயாரிப்பாகிய LG FAWM -9987 மாடல் வாஷிங் மெஷின் ஒன்றை ( *டீலர் / விற்பனையாளர் முகவரி* ) என்ற் டீலரிடம் / விற்பனையாளரிடம் 5-6-2009 ல் வாங்கியுள்ளேன். பில் நம்ம்பர். 5678 / 5-6-2009. மேற்படி மிஷின் இரண்டு மாத காலத்தில் மூன்று முறை பழுது ஏற்பட்டு, தங்கள் சர்வீஸ் செண்டரால் சரி செய்யப்பட்டுள்ளது. அதன் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. 25-6-2009 - சர்வீஸ் கால் நம்பர்: CHN 5660
2. 15 -7-2009 - சர்வீஸ் கால் நம்பர்: CHN 9078
3. 10-8-2009 - சர்வீஸ் கால் நம்பர்: CHN 10233
இதனால் என்னால் தொடர்ந்து உபயோகிக்க இயலவில்லை. இவ்விதம் அடிக்கடி பழுது ஏற்பட காரணம், எனக்கு விற்பனை செய்யப்பட்ட மெஷின் உற்பத்தி குறைபாடான ஒன்றாகும். எனவே உடனடியாக மேற்படி மெஷினுக்கு பதில், வேறு ஒரு மெஷின் மாற்றித்தரும்படி தங்களிடம் கூறியதற்கு மறுத்து விட்டீர்கள்.

எனவே, மேற்படி மெஷினை மாற்றி தர வேண்டும் என, தங்கள் நிறுவன்த்தின் மீது மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன். இதில் தங்களுக்கு ஏதாவது ஆட்சேபணை இருக்குமானால் , இந்த நோட்டீஸ் கிடைத்த பதினைந்து நாட்களுக்குள் தெரியப்படுத்த வேண்டும். அவ்விதம் தெரியப்படுத்தாத பட்சத்தில், மேற்படி குற்றசாட்டை ஒப்புக்கொள்வதாகவும் ஆனால் பிரசனையை சுமுகமாக தீர்க்க விரும்பவில்லை எனவும் முடிவு செய்து, முறைப்படி வழக்கு தாக்கல் செய்யப்படும் என்ற விபரம் இதன் மூலம் தெரியப்படுத்தப்படுகிறது.

இப்படிக்கு

( கையொப்பம்)
(பெயர்)
நாள்:----------------

மக்கள் இலவச சட்ட உதவி மையம்
080150 06235

07/01/2025

மதுரை மாநகரத்தின் புதிய தெற்கு காவல் துணை ஆணையராக
திரு. A.G. இனிகோ திவ்யன் TPS, அவர்கள் இன்று (07.01.2025) பொறுப்பேற்றுக்கொண்டார்.

நீதிமன்ற தீர்ப்புகள்....இது தொடர்பான நீதிமன்ற உத்தரவுகள் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள....இவண்Madurai Manzil மக்கள் இலவச ச...
20/12/2024

நீதிமன்ற தீர்ப்புகள்....

இது தொடர்பான நீதிமன்ற உத்தரவுகள் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள....

இவண்
Madurai Manzil
மக்கள் இலவச சட்ட உதவி மையம்
080150 06235

 #காவல்_துறையினரின்,   #மனித_உரிமை மீறல்களை, மனித உரிமை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வது எப்படிமாநில மனித உரிமை ஆணை...
20/12/2024

#காவல்_துறையினரின், #மனித_உரிமை மீறல்களை, மனித உரிமை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வது எப்படி

மாநில மனித உரிமை ஆணையம், தேசிய மனித உரிமை ஆணையம், மற்றும் மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்கள் என்ற மூன்று அமைப்புகள் மனித உரிமை பாதுகாப்பு சட்டத்தால் அமைக்கப்பட்டுள்ளன.

மனித உரிமை பாதுகாப்பு சட்டம், பிரிவு 30-ன்படி மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்களாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட முதன்மை நீதிமன்றம் என தமிழகத்தில் அறிவிப்பு செய்யபட்டுள்ளது.

_*புகார்*_
--------------

மனித உரிமை மீறல்களில் ஈடுபடும், காவல்துறையினர் மற்றும் அரசு துறையினர், தனியார் நிறுவனங்கள், தனி நபர்கள் உள்ளிட்ட அனைத்து பாதிக்கப்பட்டவர்கள், சம்பவம் நடைபெற்ற இடத்தில் உள்ள, மாவட்ட மனித உரிமை நீதிமன்றத்தில் அல்லது மாநில மனித உரிமை ஆணையம் மற்றும் தேசிய மனித உரிமை ஆணையம் போன்றவற்றில் புகார் அளிக்கலாம்.

வாழ்க்கை சுதந்திரம் சமத்துவம் தனி மனித கௌரவம் குறித்த உரிமைகளே மனித உரிமை எனப்படும் என்று மனித உரிமை பாதுகாப்பு சட்டம் பிரிவு 2(d) தெரிவிக்கிறது இவற்றை தவிர மற்றவை தொடர்பான புகார்களை மனித உரிமை அமைப்புகளில் புகார் கொடுக்க கூடாது.

தேசிய மாநில ஆணையங்கள் விசாரணை செய்து வழங்கும் தீர்ப்பானது பரிந்துரை மட்டுமே இவ்வாறான பரிந்துரைகள் பல கிடப்பில் உள்ளன பல சமயங்களில் மாநில ஆணையங்களில் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகள் காலியாக விடப்படுகிறது ஆனால் மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்களுக்கு தவறிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் உண்டு.

தேசிய,மாநில ஆணையங்கள் வெகு தொலைவில் இருப்பவை மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்கள் அருகே இருப்பவை.

புகார் தாக்கல் முறை – :

மாவட்ட மனித உரிமை நீதிமன்றத்தில் நேரடியாக புகார் தாக்கல் செய்ய இயலாது மனித உரிமை மீறல்களினால் பாதிக்கப்பட்டவர் தமது புகாரை தாமாக அல்லது வழக்கறிஞர் மூலம் தனி புகாராக (private Complaint) தயாரிக்க வேண்டும்.

இப்புகாரானது மனித உரிமை பாதுகாப்பு சட்டத்தை மேற்கோள் காட்டி குற்றவியல் விசாரணை முறை சட்டம், [CrPC] 1973, பிரிவு-200, தற்போதைய பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா BNSS -2023, [BNSS] பிரிவு-223 -ன்படி குற்றம் நிகழ்ந்த இடம் உள்ள, பகுதிக்கு உட்பட்ட ஆள்வரையுள்ள (Jurisdiction) குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் (Judicial Magistrate Court) [JM] நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும்.

புகாரை பெற்ற குற்றவியல் நடுவர் நீதிமன்றம் குற்றவியல் விசாரணை முறை சட்டம் பிரிவு 202-ன்படி BNSS, பிரிவு 225-ன்படி விசாரணை செய்து புகாரில் அடிப்படை உள்ளது என முடிவு செய்தால் எதிரிகளுக்கு அழைப்பாணை அனுப்பி புகார் நகலை வழங்கி கேள்வி கேட்டு பின்பு விசாரணைக்கு மாவட்ட மனித உரிமை நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கும்.

மாயத்தோற்றமா?

மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்கள் தமிழகத்தில் கடந்த 1996-ல் அமைக்கப்பட்டது கடந்த 1996 முதல் 2010 வரை தமிழகத்தில் இருந்து தேசிய மாநில மனித உரிமைகள் ஆணையங்களில் மற்றும் மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்களில் சமர்பிக்கப்பட்ட புகார்களின் மொத்த எண்ணிக்கை -130233 இதே பதினைந்து ஆண்டுகளில் தமிழகத்தில் இருந்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் சமர்பிக்கப்பட்ட புகார்களின் எண்ணிக்கை -21349 இதே பத்து ஆண்டுகளில் தமிழகத்தில் இருந்து மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் சமர்பிக்கப்பட்ட புகார்களின் எண்ணிக்கை – 108717

இதே பத்து ஆண்டுகளில் தமிழக மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்களில் சமர்பிக்கப்பட்ட புகார்களின் எண்ணிக்கை -167

பரிந்துரை அதிகாரம் மட்டுமே
கொண்ட ஆணையங்களை நாடிய மக்கள் -99.9% தீர்ப்பு வழங்கும் அதிகாரம் கொண்ட மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்களை நாடிய மக்கள் – 0.1%. இதற்கு காரணம் மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்கள் குறித்த விழிப்புணர்வின்மை நடைமுறை பிரச்சினைகள்.

தேசிய, மாநில மனித உரிமைகள் ஆணையங்களில் சிறப்பு புலனாய்வு குழுக்கள் உள்ளன. இதைப்போல பிரிவு 37 -ன்படி உள்ளபடி மாவட்ட அளவில் மனித உரிமைக்கான சிறப்பு புலனாய்வு குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்களில் இதைப்போல பிரிவு 31-ன்படி உள்ளபடி அரசு குற்றஞ்சாட்டுனர்கள் உடனே நியமிக்கப்பட வேண்டும். மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்களுக்கான தக்க விதிமுறைகளும் வழி காட்டுதல்களும உடனே வகுக்கப்பட வேண்டும். பொது மக்களிடையே மனித உரிமை நீதிமன்றங்கள் குறித்த விழிப்புணர்வை வளர்க்க வேண்டும்..!

காவல்துறையால் பாதிக்கப்பட்டவர்கள்
தகுந்த நிவாரணம் வரை எங்களுக்கு தொடர்பு கொள்ளவும் ....

இவண்
Madurai Manzil
மக்கள் இலவச சட்ட உதவி மையம்
080150 06235

குற்றவாளிகளிடமிருந்து திருடிய குற்றவாளிகள் .....
18/12/2024

குற்றவாளிகளிடமிருந்து திருடிய குற்றவாளிகள் .....

இது போன்று குடும்ப வன்முறை சட்டங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கணவர் வீட்டினால் கொடுமைக்கு உள்...
14/12/2024

இது போன்று குடும்ப வன்முறை சட்டங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கணவர் வீட்டினால் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் சட்டத்தை முறையாக பயன்படுத்த தொடர்பு கொள்ளவும் ...

இவண்

Madurai Manzil
மக்கள் இலவச சட்ட உதவி மையம்

நுகர்வு பொருட்கள் தொடர்பான சேவை குறைபாடுகளுக்கு உரிய முறையில் நுகர்வோர் நீதிமன்றங்களை அணுகி பலன் பெறவும் ....நுகர்வோர் ந...
14/12/2024

நுகர்வு பொருட்கள் தொடர்பான சேவை குறைபாடுகளுக்கு உரிய முறையில் நுகர்வோர் நீதிமன்றங்களை அணுகி பலன் பெறவும் ....

நுகர்வோர் நீதிமன்றங்களை அணுக தொடர்பு கொள்ளுங்கள்...

இவன்

Madurai Manzil

மக்கள் இலவச சட்ட உதவி மையம்

Address

11, KNM Plaza, MARUTHU PANDIYAR STREET, KK NAGAR
Madurai
625020

Opening Hours

Monday 9am - 10pm
Tuesday 9am - 10pm
Wednesday 9am - 10pm
Thursday 9am - 10pm
Friday 9am - 10pm
Saturday 9am - 10pm

Telephone

+917373996235

Website

Alerts

Be the first to know and let us send you an email when மக்கள் இலவச சட்ட உதவி மையம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share