Advocates

Advocates For all your legal needs


Documentation/Legal Consultations

Justice Krishna Iyer, "This freedom is essential because the censorial power lies in the people over and against the Government and not in the Government over and against the people."

16/06/2026

மடிப்பாக்கம் பகுதியில் நமது அலுவலகத்திற்கு இடம் தேவைப்படுகிறது யாராவது தெரிந்தால் பதிவிடவும்.

*வாய்தா மேல வாய்தா வாங்குறீங்களா? Case 10 வருஷம் இழுக்க 5 காரணம்*வழக்கு போட்டு 3 வருஷம் ஆச்சு. இன்னும் தீர்பே வரல. ஒவ்வொ...
16/06/2026

*வாய்தா மேல வாய்தா வாங்குறீங்களா? Case 10 வருஷம் இழுக்க 5 காரணம்*

வழக்கு போட்டு 3 வருஷம் ஆச்சு. இன்னும் தீர்பே வரல. ஒவ்வொரு தேதிக்கும் "வாய்தா வாய்தா"னு மட்டும் தான் வருது. லீவ் போட்டு Court போறீங்க. Lawyer "அய்யா அடுத்த தேதி வாங்க"னு சொல்றாரு. இந்த பிரச்சனை உங்களுக்கு மட்டும் இல்ல தமிழ்நாடு முழுக்க 70% வழக்கு இப்படி தான் இழுக்குது.

*ஏன் இப்படி ஆகுது? Court மேல தப்பு சொல்லி பிரயோஜனம் இல்ல*

*7 முக்கிய தெரிந்த காரணங்கள்.

*1. டாக்குமெண்ட் ரெடி இல்ல*

வக்கீல் "அடுத்த தேதிக்கு Agreement Original கொண்டு வாங்க"னு சொல்லி இருப்பாரு. நீங்க மறந்துடுவீங்க. இல்ல தேடி கிடைக்காது. அடுத்த தேதி வக்கீல் எந்திரிச்சு "Time வேணும் அய்யா"னு வாய்தா கேப்பாரு. Judge-ம் "சரி 1 மாசம் கழிச்சு வா"னு சொல்லிடுவாரு. ஒரு பேப்பருக்காக 30 நாள் ஓடிடும்.
தீர்வு: ஒரு File Folder வச்சுக்கோங்க. வக்கீல் கேக்குற எல்லா பேப்பரையும், Bill, Receipt எல்லாத்தையும் அதுல போட்டு வச்சுடுங்க. அடுத்த தேதிக்கு முன்னாடியே வக்கீல் கிட்ட கொடுத்துடுங்க.

*2. எதிரி கட்சி Notice வாங்க மாட்டேங்குறாங்க*

Case போட்டா முதல் வேலை எதிரிக்கு சம்மன் அனுப்புறது. அவன் வீட்டுல இல்ல, வேற ஊருக்கு போய்டான், வாங்க மாட்டேங்குறான். Postman 3 தடவ திரும்பி வந்துடுவாரு. ஒவ்வொரு தடவையும் "Service Pending"னு சொல்லி வாய்தா தான்.
தீர்வு: எதிரி ஓடுறான்னு தெரிஞ்சா, வக்கீல் கிட்ட "Substituted Service" கேளுங்க. பேப்பர்ல விளம்பரம் கொடுத்து Court Notice Board-ல ஒட்டிடுவாங்க. அதுவே Notice வாங்குன மாதிரி ஆகிடும். Time மிச்சம்.

*3. சாட்சி வர மாட்டேங்குறாங்க*

உங்க தரப்பு நியாயத்த சொல்ல சாட்சி ஆளுங்க வரணும். "வேலை இருக்கு, வர முடியல, அடுத்த தேதி பாக்கலாம்"னு சொல்லி தட்டி கழிப்பாங்க. சாட்சி இல்லாம வழக்கு நகராது. Judge வேற வழி இல்லாம வாய்தா போடுவாரு.
தீர்வு: Case போடுறதுக்கு முன்னாடியே சாட்சிகிட்ட "3 தேதி வரணும் அண்ணா"னு உறுதியா சம்மதம் வாங்கிடுங்க. அவங்க Mobile Number, Address வாங்கி வக்கீல் கிட்ட கொடுங்க. வரலனா Court சம்மன் அனுப்பும்.

*4. வக்கீல் மாற்றம்*

இந்த வக்கீல் சரியா வரலனு 6 மாசத்துக்கு ஒரு தடவ மாத்துறீங்க. புது வக்கீல் வந்து File மொத்தையும் படிக்க 2 வாய்தா கேப்பாரு. பழைய வக்கீல் Notes கொடுக்காம இழுப்பாரு. இதுலயே 4 மாசம் போய்டும்.
தீர்வு: வக்கீல மாத்துறதா இருந்தா ஒரே முடிவா மாத்துங்க. அடிக்கடி மாத்தாதீங்க. ஒரு வக்கீல வச்சு Full-ஆ முடிக்க பாருங்க. அவரு Case History முழுக்க தெரிஞ்சு வச்சு இருப்பாரு.

*5. Settlement பேச்சு வார்தை*

"அய்யா கொஞ்சம் பேசி வெளில முடிச்சுடலாம்"னு சொல்லி ரெண்டு தரப்பும் வாய்தா கேக்குறோம். Judge-ம் "சரி பேசி பாருங்க"னு சொல்லி தேதி போடுவாரு. பேச்சு நடக்குது. ஆனா முடிவு வர மாட்டேங்குது. 1 வருஷம் Settlement பேச்சுலயே ஓடிடும்.
தீர்வு: Settlement பேசுறீங்கனா Time Limit போட்டுக்கோங்க. "2 மாசத்துக்குள்ள முடிக்கலனா Case-அ வேகமா நடத்துங்க அய்யா"னு Judge கிட்ட சொல்லிடுங்க. இல்லாம பேசிட்டே இருந்தா வாழ்கை ஓடிடும்.

6. எதிர் தரப்பு மனு மேல் மனு போட்டு வழக்கை இழுத்தடிக்க முயற்சிப்பார்கள். ஆனால் ஒவ்வொரு மனுவுக்கும் நாம் பதில் மனு போட வேண்டும். அதன் பிறகு அந்த மனு மேல் வாதங்கள் நடைபெற்று அந்த மனு மேல் தீர்ப்பு சொல்லிய பிறகு தான் அசல் வழக்கு நடைபெறும் ஆகவே இந்த தாமதம் ஏற்படுகிறது.

7. மனுதாரர்கள் நான்கைந்து பேர் இருக்கும்போது பழக்க நடக்கும் தருணத்திலேயே அவர்கள் இறந்து விடுவார்கள் ஆகவே அவர்களுடைய வாரிசுகளை வழக்கில் சேர்க்க நாம் மனு செய்ய வேண்டும் அதனால் தாமதம் ஏற்படுகிறது.

*அப்போ Case சீக்கிரம் முடிய நீங்க என்ன பண்ணணும்?*

1. வக்கீல் சொல்றதை அடுத்த தேதிக்குள்ள முடிச்சு கொடுத்துடுங்க. Delay பண்ணாதீங்க.

2. ஒவ்வொரு தேதிக்கும் "அய்யா அடுத்து என்ன வேலை இருக்கு, எப்போ முடியும்"னு கேட்டுக்கோங்க.

3. E-Courts App Download பண்ணி CNR Number போட்டு அடுத்த தேதி என்ன Stage-னு நீங்களே பாருங்க. பயம் போய்டும்.

வழக்கு இழுக்குறது Court மட்டும் தப்பு இல்ல சார். நம்ம தயார் இல்லாமையும், தாமதமும் ஒரு காரணம்.

தங்களுக்கும் இந்த அனுபவம் இருந்தால் பதிவிடவும்.

Advocates

Follow Advocate 🤝 Associates's WhatsApp Channel. https://whatsapp.com/channel/0029VaAPZP2BlHplvjEfgO0J

*Email. [email protected]*

https://www.facebook.com/share/1ExkDosgjr/

*Contact us 9566950106*. Join 4.1K followers for the latest updates.

29/05/2026

*"Warrant இல்லாம Police வீட்டுக்குள்ள வரலாமா? BNS 329 என்ன சொல்லுது"*

கதவை தட்டுற சத்தம். திறந்தா Police. "உள்ள வரலாமா?"னு கூட கேக்காம, Boot காலோட வீட்டுக்குள்ள நுழையுறாங்க. "என்ன சார், Warrant இருக்கா?"னு கேட்டா, "நாங்க Police, எங்களுக்கு எதுக்குடா Warrant?"னு மிரட்டுறாங்க. இது சினிமா இல்ல. நிஜத்துல தினமும் நடக்குது.

*ஆனா சட்டம் என்ன சொல்லுது தெரியுமா? Warrant இல்லாம வீட்டுக்குள்ள நுழையுற Police-ஆ இருந்தாலும் அது "அத்துமீறல்" தான். BNS 329 படி அதுவும் குற்றம்.*

*வீட்டு உரிமை என்ன சொல்லுது?*

*1. அத்துமீறல் என்றால் என்ன? - BNS 329*

உங்க அனுமதி இல்லாம, உங்க வீடு, ஆபீஸ், கடைக்குள்ள யார் நுழைஞ்சாலும் அது *"Criminal Trespass"*. *BNS 329 படி 1 வருட ஜெயில் + அபராதம்.*
*ஆயுதத்தோட வந்தா? BNS 332* - கத்தி, லத்தியோட மிரட்டி உள்ள வந்தா *7 வருட ஜெயில்*. அடிக்க வந்தா BNS 333 - *10 வருட ஜெயில்*. சட்டம் ரொம்ப தெளிவா இருக்கு.

*2. Police எப்போ உள்ள வரலாம்?
3 நிலைமை மட்டும் தான்*

Police-னாலும் சட்டத்துக்கு மேல இல்ல. *BNSS 2026 படி 3 சூழ்நிலைல மட்டும் தான் Warrant இல்லாம வரலாம்:*
- *கண்ணு முன்னாடி குற்றம்*: வீட்டுக்குள்ள கொலை, அடிதடி, பொம்பளைய அழுவுற சத்தம் கேட்டா BNSS 47 படி உடைச்சு உள்ள போகலாம்.
- *தப்பிச்சு ஓடி ஒளிஞ்சா*: திருடிட்டு உங்க வீட்டுக்குள்ள ஒருத்தன் ஓடினா, Police துரத்திட்டு வரலாம்.
- *Search Warrant இருந்தா*: Magistrate கையெழுத்து போட்ட BNSS 96 Warrant இருந்தா மட்டும் தான் சோதனை போடலாம். *Warrant-ல உங்க Address, என்ன தேடுறாங்கனு தெளிவா இருக்கணும்.*

இந்த 3-ம் இல்லாம, "சும்மா விசாரிக்கணும், ஸ்டேஷனுக்கு வா"னு சொல்லி உள்ள வந்தா அது *அத்துமீறல் தான்.*

*3. Police அத்துமீறி வந்தா நீங்க என்ன பண்ணணும்? 4 Step*

- *Step 1: கதவை திறக்காதீங்க, கேள்வி கேளுங்க*: "யார் சார் நீங்க? ID Card காட்டுங்க. Warrant இருக்கா? எந்த Case-க்கு வந்தீங்க?"னு கேளுங்க. *பேசுறத Video எடுங்க.* BNSS 63 படி இது Court-ல ஆதாரம்.

- *Step 2: மீறி உள்ள வந்தா 100/112-க்கு கால் பண்ணுங்க*: "ஒரு Police அத்துமீறி வீட்டுக்குள்ள வரார்"னு சொல்லுங்க. PCR வருவாங்க.

- *Step 3: SP/DCP ஆபீஸ்ல புகார் கொடுங்க*: அந்த Police-ஓட பேர், Batch No வச்சு *"Police Misconduct"*னு Complaint பண்ணுங்க. Department Enquiry வரும்.

- *Step 4: Court-ல Private Complaint போடுங்க*: BNSS 220 படி Magistrate-கிட்ட நேரா Complaint பண்ணலாம். அந்த Police மேல BNS 329, BNS 166 - "பொது ஊழியர் சட்டத்தை மீறுதல்" Case போடலாம். *Police மேலயும் Case போடலாம்.*

*4. சாதாரண ஆள் அத்துமீறி வந்தா?*

பக்கத்து வீட்டுக்காரன், கடன் கொடுத்தவன், யாரா இருந்தாலும் உள்ள வர கூடாது. உடனே *100-க்கு கால் பண்ணி, Station-ல BNS 329 FIR போடுங்க.* இது *Cognizable, Non-Bailable* குற்றம். Police உடனே Action எடுக்கணும்.

Client வீட்டுக்கு Police போயிருந்தா பயப்படாதீங்க. முதல்ல *"வீடியோ ஆதாரம் இருக்கா?"*னு கேளுங்க. Warrant இல்லாம நுழைஞ்சா அது Client-க்கு சாதகம். *Anticipatory Bail* எடுக்கவும், Police மேல Complaint பண்ணவும் இதை Use பண்ணலாம். *"Right to Privacy"* - _K.S. Puttaswamy Case_ Supreme Court தீர்ப்பு சொல்லுது, வீடு உங்க Private இடம்.

*"ஒவ்வொருத்தனோட வீடும், அவனோட கோட்டை"* - இது தான் சட்டம். கதவை உடைச்சு உள்ள வர்றது Police-ஆ இருந்தாலும் சரி, ரவுடியா இருந்தாலும் சரி, அது குற்றம் தான். உரிமையை தெரிஞ்சுக்கோங்க. கேள்வி கேளுங்க. *சட்டம் உங்க பக்கம் இருக்கு. பயப்படாதீங்க, பணிஞ்சு போகாதீங்க.*

வாரண்ட் (Warrant) இல்லாமல் போலீஸார் உங்கள் வீட்டிற்குள் வரலாம்; ஆனால் அதற்குச் சட்டத்தில் சில கடுமையான நிபந்தனைகள் உள்ளன.

குற்றம் நடந்த இடத்தில் இருக்கும் ஆதாரங்களை அழிக்கக்கூடும் என்ற சூழலில் அல்லது குறிப்பிட்ட சில அவசரக் காலங்களில் போலீசாருக்கு இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

*BNS 329 என்ன சொல்கிறது?*

நீங்கள் குறிப்பிடும் BNS 329 (Bharatiya Nyaya Sanhita) என்பது அத்துமீறி நுழைதல் (Criminal Trespass / House Trespass) பற்றியதாகும்.

அதாவது, முன் அனுமதியின்றி அல்லது சட்டவிரோதமாக ஒருவரின் வீட்டிற்குள் நுழைவதைக் குற்றமாக அறிவிக்கிறது.

இந்த சட்டம் பொதுமக்களுக்குத்தான் பொருந்தும், போலீசாருக்கு அல்ல. அதாவது எந்தவொரு தனிநபரும், குற்றச் செயல் அல்லது அச்சுறுத்தும் நோக்கில் பிறர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தால் அது BNS 329-படி குற்றமாகும்.

ஆனால், காவல்துறை அதிகாரிகளுக்குச் சட்டத்தின் அடிப்படையில் (CrPC அல்லது புதிய BNSS சட்டத்தின்படி) சில சிறப்பு அதிகாரங்கள் உள்ளன.

எந்தெந்த சூழ்நிலைகளில் போலீஸார் வாரண்ட் இல்லாமல் வீட்டிற்குள் நுழையலாம்?

*சந்தேகத்திற்குரிய நபரைத் தேடி (To Arrest a Suspect):* ஒரு கொலை, கொள்ளை போன்ற பெரிய குற்றத்தில் தேடப்படும் நபர் உங்கள் வீட்டிற்குள் பதுங்கியுள்ளார் என்று போலீஸாருக்கு உறுதியான தகவல் இருந்தால், அவர்கள் வாரண்ட் இல்லாமல் உள்ளே நுழையலாம்.

*அவசர நிலை (Emergency/Felony):* உங்கள் வீட்டிலிருந்து ஆபத்துக் குரல் (உதாரணமாக: உதவி கேட்டு கூச்சல் அல்லது அடிதடி சத்தம்) கேட்டாலோ, அல்லது உயிருக்கு ஆபத்து என்று நம்பத்தகுந்த சூழ்நிலை இருந்தாலோ வாரண்ட் இல்லாமல் நுழையலாம்.

*தேடுதல் வேட்டை (Search without Warrant):* ஒரு குறிப்பிட்ட குற்றவாளியை அல்லது தடை செய்யப்பட்ட பொருட்களை (போதைப்பொருள், ஆயுதங்கள்) தேடும் போது, நீதிமன்றத்திடம் வாரண்ட் வாங்க நேரமில்லை என்றால், உரிய நடைமுறைகளைப் பின்பற்றி போலீஸார் சோதனை நடத்தலாம்.

*பொருட்களை மீட்டல்:* நீங்கள் வைத்திருக்கும் திருட்டுப் பொருட்கள் உங்கள் வீட்டில் இருக்கின்றன என்று உறுதியான தகவல் இருந்தால், உள்ளே நுழைந்து சோதனையிடலாம்.

காவல்துறை வீட்டிற்குள் வரும்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
காரணம் கேளுங்கள்:

எதற்காக வீட்டிற்குள் நுழைய வேண்டும் அல்லது யாரைத் தேடுகிறார்கள் என்பதற்கான காரணத்தைக் கேட்க உங்களுக்கு முழு உரிமை உண்டு.

*அடையாள அட்டை:* போலீஸார் சீருடையில் இல்லை என்றால், அவர்களின் அடையாள அட்டையைக் (ID Card) காண்பிக்கக் கேட்கலாம்.

போலீஸார் வாரண்ட் இல்லாமல் வந்து உங்கள் வீட்டைச் சோதனையிடும் முன், அந்த அதிகாரிகளே முறையாகப் பதிவு செய்துவிட்டுத்தான் சோதனை நடத்த முடியும்.

*குறிப்பு*:

*குற்றம்*: BNS 329 - அத்துமீறி நுழைதல். *தண்டனை*: 1 வருட சிறை. *Police-க்கு விதிவிலக்கு*: BNSS 47, 96 மட்டும் தான். *புகார்*: 100 / SP Office / Court.

*Thanks : Advocates Associates"விவாகரத்து வழக்குல 'Medical Counseling, Psychology Doctor-ஐ பாருங்க' னு சொன்னா பயப்பட வேண...
23/05/2026

*Thanks : Advocates Associates

"விவாகரத்து வழக்குல 'Medical Counseling, Psychology Doctor-ஐ பாருங்க' னு சொன்னா பயப்பட வேண்டாம்!"

இப்போல்லாம் Divorce Case-ல ஒரு புது Trend. எதிர் தரப்பு வக்கீல் _"உங்க கட்சிக்காரர Medical Counseling போகணும், Psychology Doctor-ஐ பார்க்கணும்"_ னு Notice அனுப்புறாங்க.

உடனே நம்ம Clients பயந்துடுறாங்க. _"என்னய பைத்தியம்னு சொல்றாங்களா?"_ னு அழுறாங்க.

*உண்மை என்ன? பயப்படணுமா?*

*1. ஏன் இப்படி கேட்குறாங்க? 3 காரணம்*

1. *Case-ஐ இழுக்க:* Family Court Counseling 3 மாசம். அதுக்கு அப்புறம் "Medical Counseling போகல" னு சொல்லி இன்னும் 3 மாசம் இழுப்பாங்க.

2. *Mental Illness Ground:* _"அவருக்கு மனநோய் இருக்கு, அதான் குடும்பம் பிரியுது"_ னு Hindu Marriage Act Sec 13(1)(iii)-ல Divorce வாங்க Plan பண்றாங்க.

3. *Custody Game:* _"அப்பா/அம்மாவுக்கு மனநிலை சரியில்ல. குழந்தை எங்க கிட்ட இருக்கணும்"_ னு Point எடுக்குறாங்க.

*2. நீங்க பயப்பட வேண்டாம். ஏன்?*

*Court-ஓட எண்ணம்:* _"ஒரு வேளை சின்ன Stress, கோபம், Depression இருந்தா Counseling மூலமா சரி பண்ணி குடும்பத்த சேர்த்து வைக்கலாமா?"_ னு தான். உங்களை அசிங்கப்படுத்த இல்ல.

BP, Sugar Check பண்ற மாதிரி தான் இதுவும். _Mental Fitness Certificate_.

*3. Court Order வந்தா என்ன பண்ணனும்?*

1. *பயப்படாதீங்க:* அவமானமா நினைக்காதீங்க. வெளிநாடு வேலைக்கு, Govt வேலைக்கு Medical Test எடுக்குறோம் இல்லையா? அது மாதிரி தான்.

2. *எங்க போகணும்:* *அரசு மருத்துவமனை Psychiatrist* கிட்ட மட்டும் போங்க. Private Doctor Report-ஐ Court ஏத்துக்காது.

3. *என்ன கேட்பாங்க:* பேர், வயசு, தூக்கம், சாப்பாடு, கோபம் வருதா? 20 நிமிஷம் Normal-ஆ பேசுவாங்க. அவ்வளவு தான்.

4. *Report:* _"Patient has no psychiatric illness. Mentally sound and fit"_ னு ஒரு Certificate கொடுப்பாங்க. அதை Court-ல File பண்ணிட்டா போதும். Case உங்களுக்கு சாதகமா ஆகிடும்.

*4. Court Order இல்லாம எதிர் தரப்பு மட்டும் கேட்டா?*

அப்போ நீங்க போக வேண்டிய அவசியம் இல்லை. உங்க வக்கீல் மூலமா பதில் Notice அனுப்புங்க:
_"என் கட்சிக்காரர் முழு மனநலத்துடன் உள்ளார். மாண்புமிகு நீதிமன்றம் உத்தரவிட்டால் பரிசோதனைக்கு தயார்."_

*முக்கியமான செய்தி:*

Divorce Case-ல _"Medical Counseling"_ னு சொன்னா அது உங்களுக்கு எதிரான ஆயுதம் இல்ல. *நீங்க "Mentally Strong"-னு Prove பண்றதுக்கு கிடைக்குற வாய்ப்பு.*

நீங்க போகலைனா தான் Judge _"ஏதோ மறைக்குறார்"_ னு தப்பா நினைப்பார். Jeevanamsam, குழந்தை Custody-ல பாதிக்கும்.

*சட்டம் தெரிஞ்சுக்கோங்க, பயம் இல்லாம எதிர்கொள்ளுங்க.*

இந்த தகவல் பயனுள்ளதா இருந்தா Share பண்ணுங்க. உங்க சந்தேகங்களை Comment-ல கேளுங்க.

Follow Advocate 🤝 Associates's WhatsApp Channel. https://whatsapp.com/channel/0029VaAPZP2BlHplvjEfgO0J

*Email. [email protected]*

https://www.facebook.com/share/1ExkDosgjr/

*Contact us 9566950106*. Join 4.1K followers for the latest updates.

15/05/2026

*தற்காலிக தடை உத்தரவு (Temporary / Interim Injunction) என்றால் என்ன?*

*ஒரு வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று கொண்டிருக்கும்போது,*
*வழக்கு முடிவடையும் வரை ஒரு தரப்பினர் செய்யக்கூடாத செயல்களை தற்காலிகமாகத் தடுக்க நீதிமன்றம் வழங்கும் உத்தரவே தற்காலிக தடை உத்தரவு ஆகும்.*

*இதனை ஆங்கிலத்தில்:*
*Temporary Injunction*
*Interim Injunction*
*என்று அழைக்கப்படுகிறது.*

*எளிய விளக்கம்*
ஒருவர் உங்கள் நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி செய்கிறார் எனக் கொள்ளுங்கள்.

வழக்கு முடிவடைய பல மாதங்கள் ஆகலாம்.
அந்த நேரத்தில் எதிர் தரப்பினர்:
நிலத்தை விற்பனை செய்தால்,
கட்டிடம் கட்டினால்,
சேதப்படுத்தினால்,
பின்னர் உங்களுக்கு பெரிய இழப்பு ஏற்படும்.
*அதனால் நீதிமன்றம்:*
“வழக்கு முடியும் வரை எந்த மாற்றமும் செய்யக்கூடாது”
என்று இடைக்காலமாக வழங்கும் உத்தரவே
தற்காலிக தடை உத்தரவு ஆகும்.

*சட்ட அடிப்படை*
இந்த உத்தரவு பொதுவாக:
Civil Procedure Code (CPC)
Order 39 Rule 1 & 2
அடிப்படையில் வழங்கப்படுகிறது.

*நீதிமன்றம் பார்க்கும் முக்கிய அம்சங்கள்*

*தற்காலிக தடை உத்தரவு வழங்கும்போது *நீதிமன்றம் மூன்று முக்கிய விஷயங்களை கவனிக்கும்:*

*1. Prima Facie Case*
முதல் பார்வையில் மனுதாரருக்கு நியாயமான உரிமை இருக்கிறதா?

*2. Balance of Convenience*
யாருக்கு அதிக பாதிப்பு ஏற்படும்?

*3. Irreparable Loss*
பின்னர் பணம் கொடுத்தாலும் சரிசெய்ய முடியாத இழப்பு உண்டாகுமா?

*உதாரணங்கள்*

சொத்து வழக்குகள்

நிலத்தை விற்க தடை

கட்டிடம் கட்ட தடை

குடும்ப வழக்குகள்

குடும்ப சொத்தை மாற்ற தடை

வணிக வழக்குகள்
காப்புரிமை மீறல் தடை

போலி பொருள்

விற்பனை தடை

*தடை உத்தரவின் வகைகள்*

*Temporary Injunction*
வழக்கு நடைபெறும் காலத்திற்கு.

*Interim Injunction*
அவசர சூழலில் உடனடி இடைக்கால உத்தரவு.

*Permanent Injunction*
வழக்கு இறுதி தீர்ப்பில் வழங்கப்படும் நிரந்தர தடை.

*முக்கிய குறிப்பு*
*தற்காலிக தடை உத்தரவை மீறினால்:*

நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை,
அபராதம்,
கைது,
சொத்து பறிமுதல்
போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்.

*சுருக்கமாக*

*“வழக்கு முடியும் வரை நிலைமை மாற்றப்படாமல் பாதுகாக்க நீதிமன்றம் வழங்கும் இடைக்கால தடை உத்தரவே தற்காலிக தடை உத்தரவு.”*

08/05/2026

*உயில் vs செட்டில்மெண்ட் சொத்தை யாருக்கு எப்படி கொடுக்கணும்.*

தாத்தா, பாட்டி,அப்பா,சொத்தை பிள்ளைகளுக்கு கொடுக்கும் போது நிறைய பேரு குழம்புறாங்க.

உயில் எழுதட்டுமா? செட்டில்மெண்ட் பண்ணிடவா?”னு. இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கு.

*1. உயில்-விளக்கம் என்ன?*

என் செத்ததுக்கு அப்புறம் என் சொத்து இவனுக்கு போகணும்னு எழுதி வைக்கிறது

எப்போ செல்லும்? எழுதுனவர் இறந்த பிறகு தான்

மாத்த முடியுமா? உயிரோட இருக்க வரைக்கும் 100 தடவை கூட மாத்தலாம், கிழிச்சு போடலாம்

பத்திர செலவு Stamp Duty இல்ல. ₹100-க்கு எழுதலாம். Register பண்ணாலும் ₹200 தான்

Risk செத்ததுக்கு அப்புறம் பிள்ளைங்க கோர்ட்டுக்கு போய் “அப்பா மனநிலை சரியில்ல”னு Case போடலாம்

*யாருக்கு Best:* “இப்போதைக்கு சொத்து என் கையிலயே இருக்கணும், ஆனா செத்ததுக்கு அப்புறம் தகராறு வரக்கூடாது”னு நினைக்கிறவங்களுக்கு.

*2. செட்டில்மெண்ட் – Settlement Deed*

உயிரோட இருக்கும் போதே சொத்தை அன்பளிப்பா கொடுத்துடுறது
எப்போ செல்லும்? பத்திரம் பதிஞ்ச உடனே சொத்து அவர் பேருக்கு மாறிடும்

மாத்த முடியுமா? ஒரு தடவை பண்ணிட்டா திரும்ப வாங்க முடியாது. Cancel பண்ண முடியாது

பத்திர செலவு அப்பா, அம்மா, பிள்ளைகள், பேரன்-பேத்தி, கணவன்-மனைவி இவங்களுக்குள்ளனா 1% Stamp Duty + 1% Registration. வெளி ஆளுனா 7% + 4%
Risk சொத்தை வாங்குன பையன் “அப்பா நீ வெளிய போ”னு சொல்லிட்டா ஒன்னும் பண்ண முடியாது

*யாருக்கு Best:* “பையன் நல்லவன், என்ன கடைசி வரைக்கும் பார்த்துப்பான்”னு 100% நம்பிக்கை இருக்குறவங்களுக்கு.

*3.அப்போ எதை தேர்ந்தெடுக்குறது*

உங்க நிலைமை எது Safe

**1. சொத்து என் Control-லயே இருக்கணும்** **உயில்** எழுதுங்க

**2. பையனுக்கு Loan வாங்க சொத்து உடனே வேணும்** **செட்டில்மெண்ட்** பண்ணுங்க

**3. 2-வது சம்சாரம், 1-வது சம்சார பிள்ளைங்க – பிரச்சினை வரும்** **உயில் + Register** பண்ணுங்க. 2 சாட்சி கையெழுத்து முக்கியம்

**4. பிள்ளைங்க சரியில்ல, ஆனா பேரனுக்கு தரணும்** **உயில்** எழுதி பேரன் மேஜர் ஆனதும் கிடைக்கிற மாதிரி Condition போடுங்க

*4. முக்கியமான 3 தப்பு பண்ணிடாதீங்க* ❌

1. *Register பண்ணாத உயில்*: செல்லும். ஆனா கோர்ட்ல நிரூபிக்க கஷ்டம். *₹200 செலவு பண்ணி Register பண்ணிடுங்க.*

2. *“எல்லா பிள்ளைக்கும் சமமா”னு வாய் வார்த்தை*: செல்லாது. *எழுத்து மூலமா தான் செல்லும்.*

3. *செட்டில்மெண்ட் பண்ணிட்டு “வீட்ல தங்க வை” Condition*: சட்டப்படி செல்லாது. *Maintenance & Welfare of Parents Act 2007* படி Case போடலாம், ஆனா கஷ்டம்.

சுருக்கம்* ✅
*“கைல இருக்குற வரைக்கும் நம்ம சொத்து. கொடுத்துட்டா அடுத்தவன் சொத்து.”*

*அதனால 60 வயசுக்கு மேல உயில் எழுதுங்க. 75 வயசுக்கு மேல, பிள்ளை நம்பிக்கையானவனா இருந்தா மட்டும் செட்டில்மெண்ட் பண்ணுங்க.*

*“சொத்து பிரிக்கிறது சுலபம். சொந்தம் பிரியாம பார்த்துக்கிறது தான் கஷ்டம்”*

05/05/2026

*வீட்டு Loan வாங்குறீங்களா?*
*Bank ஏமாத்தும் 5 தந்திரங்கள்.
*கவனம்! 1 லட்சம் வரை Extra-வா புடுங்கிடுவாங்க.*

Processing Fee இல்ல, Interest கம்மி”னு Bank சொல்லுதா?

Loan Agreement Sign பண்றதுக்கு முன்னாடி இந்த 5 தந்திரங்கள் Check பண்ணுங்க.

–தந்திரங்கள் Bank எப்படி ஏமாத்துது?_

தந்திரம் 1: “Processing Fee 0%” – ஆனா Legal Fee ₹25,000*
*என்ன நடக்கும்?* Loan Amount ₹30 லட்சம்னா, 1% Processing Fee = ₹30,000. “Fee இல்ல”னு சொல்லிட்டு *“Legal & Technical Charge” ₹25,000 + GST* போட்டு புடுங்கிடுவாங்க.
*தீர்வு*: Loan Sanction Letter-ல “All Charges Included” னு எழுதி வாங்குங்க.

*தந்திரம் 2: Floating Rate ஏறும், ஆனா இறங்காது*
*என்ன நடக்கும்?* RBI Rate ஏறுனா உடனே உங்க EMI ஏத்திடுவாங்க. ஆனா RBI Rate இறங்குனா *3 மாசம் கழிச்சு தான்* கம்மி பண்ணுவாங்க. அதுவும் நீங்க கேட்டா தான்.
*தீர்வு*: *Repo Linked Rate* கேளுங்க. RBI Rate-க்கு நேரடியா Connect ஆகும்.

தந்திரம் 3: Insurance கட்டாயம் – ₹50,000 ஆட்டைய*
*என்ன நடக்கும்?* “Loan வேணும்னா Insurance கட்டாயம்”னு சொல்லி *₹50,000 Policy*-அ Loan Amount-லயே சேர்த்துடுவாங்க. அதுக்கும் Interest கட்டுவீங்க.
*உண்மை*: *RBI-படி Insurance கட்டாயம் இல்ல.* வேண்டாம்னு சொல்ல உரிமை இருக்கு.
*தீர்வு*: “Insurance வேண்டாம்”னு எழுதி கொடுங்க.

தந்திரம் 4: Pre-closure Charge 3% – RBI தடை பண்ணியும்*
*என்ன நடக்கும்?* 5 வருஷம் கழிச்சு Loan-அ முழுசா கட்ட நினைச்சா, *“Foreclosure Charge 3%”* போடுவாங்க. ₹20 லட்சம் Balance இருந்தா ₹60,000 Extra.
*உண்மை*: *Floating Rate Home Loan-க்கு Pre-closure Charge போட கூடாது – RBI Rule.*
*தீர்வு*: Agreement-ல “NIL Foreclosure Charge” னு இருக்கானு Check பண்ணுங்க.

தந்திரம் 5: Original Document திருப்பி தர 6 மாசம்*
*என்ன நடக்கும்?* Loan முழுசா கட்டியும் *பத்திரம், பட்டா Original* தராம இழுத்தடிப்பாங்க. வீடு விக்க முடியாது.
*உண்மை*: *Loan Close ஆன 15 நாள்ல Document தரணும் – RBI Rule.* தரலனா *₹5,000/Day Fine* Bank கட்டணும்.
*தீர்வு*: Loan முடிஞ்ச உடனே *“No Due Certificate + Original Document”* கேட்டு Letter கொடுங்க.

---

_2. Loan வாங்குறதுக்கு முன்னாடி 3 கேள்வி கேளுங்க_ ✅

1. *“Total Charges எவ்வளவு? Breakup கொடுங்க”* – Processing, Legal, Technical, Insurance எல்லாம்.
2. *“Interest Type என்ன? Repo Linked-ஆ MCLR-ஆ?”* – Repo Best.
3. *“Pre-closure Charge உண்டா? Document எப்போ தருவீங்க?”* – எழுதி வாங்குங்க.

3. ஏற்கனவே Loan வாங்கிட்டீங்களா?_

*Hidden Charge இருக்கா, Foreclosure Charge போட்டிருக்காங்களானு Check பண்ணிக்குங்க!!*

_EMI கட்டுறது கஷ்டம் இல்ல. ஏமாறாம கட்டுறது தான் கஷ்டம்._

30/04/2026

*காவல் நிலையத்தில் முறைப்படி பொதுமக்கள் புகார் அளிப்பது எப்படி ?*

காவல் நிலையத்தில் புகாரளிப்பது எப்படி என்பதை எளிமையாகவும் சட்ட நடைமுறையுடனும் பார்ப்போம்

*1. எழுத்துப்பூர்வ புகார் (Written Complaint) தயார் செய்யுங்கள்*

*புகாரில் சேர்க்க வேண்டியது:*

உங்கள் பெயர், முகவரி, மொபைல் எண்

எதிர்மனுதாரர் பெயர் (தெரிந்தால்)

சம்பவ தேதி, நேரம்,

இடம்

*என்ன நடந்தது என்பதை தெளிவாக எழுதுங்கள்*

உங்களிடம் உள்ள ஆதாரங்கள் (ஆவணங்கள், புகைப்படம், ஆடியோ, வீடியோ) இணைக்கவும்

*2. சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் கொடுக்கவும்*
நேரடியாக Station House Officer (Inspector / Sub-Inspector) க்கு கொடுக்கலாம்.

புகார் பெற்றவுடன் CSR (Community Service Register) ரசீது கேட்டு வாங்க வேண்டும். இது மிக முக்கியம்.

*3. CSR என்றால் என்ன?*
இது உங்கள் புகார் பெற்றுக்கொள்ளப்பட்டது என்பதற்கான சான்று.
“மனு ரசீது” என்றும் சொல்லலாம்.

இது FIR அல்ல.
பொதுவாக ஆரம்ப விசாரணைக்காக தரப்படலாம்.

*4. FIR எப்போது பதிவு செய்ய வேண்டும்?*

கடுமையான குற்றங்கள் (திருட்டு, தாக்குதல், மோசடி போன்ற Cognizable Offence) என்றால்:
போலீஸ் FIR பதிவு செய்ய வேண்டும்.
FIR நகல் இலவசமாக தர வேண்டும்.

*5. போலீஸ் புகார் வாங்க மறுத்தால்?*

*நீங்கள் செய்யக்கூடியவை:*
மாவட்ட Superintendent of Police (SP) க்கு புகார் அனுப்பலாம்.

Registered Post / Speed Post மூலம் அனுப்பலாம்.

அருகிலுள்ள நீதிமன்றத்தில் மனு செய்யலாம்.

ஆன்லைன் grievance portal-லும் புகார் அளிக்கலாம்.

*6. முக்கியமாக நினைவில் கொள்ளுங்கள்*
✅ வாய்மொழி புகார் மட்டும் கொடுத்து வராதீர்கள்
✅ CSR copy வாங்காமல் வெளியே வராதீர்கள்
✅ FIR வேண்டும் என்றால் copy கேளுங்கள்
✅ CSR கொடுத்துவிட்டு அமைதியாக இருக்காமல் Follow-up செய்யுங்கள்

*எளிய வேறுபாடு:*
CSR = புகார் பெற்றுக்கொண்ட ரசீது

FIR = குற்ற வழக்கு பதிவு

23/04/2026

*நீதிமன்றத்தில் “Trial” என்றால் என்ன?*

*Trial (விசாரணை) என்பது*

*ஒரு குற்றவியல் வழக்கில், நீதிமன்றம் சாட்சிகள், ஆதாரங்கள், வாதங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து குற்றம் நிரூபிக்கப்பட்டதா இல்லையா என்று தீர்மானிக்கும் செயல்முறை ஆகும்.*

*➡️ எளிமையாக*:
“உண்மை கண்டறியும் நீதிமன்ற செயல்முறை” தான் Trial

*சட்ட அடிப்படை*

Criminal Procedure Code, 1973
➡️ (Chapter XVIII முதல் Chapter XXI வரை Trial வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளன)

*🔷 Trial-ன் முக்கிய அம்சங்கள்*
Evidence (சாட்சி, ஆதாரம்) ஆய்வு
Witness examination
Cross examination
Final arguments
Judgment

*🔷 Trial வகைகள் (Types of Trial)*
*🔹 1. Sessions Trial (Sessions Court Trial)*

பெரிய குற்றங்களுக்கு (Serious offences)
➡️ Sessions Court-ல் விசாரணை நடைபெறும்

*உதாரணம்:*
கொலை (Murder)
பாலியல் குற்றங்கள்

*🔹 2. Warrant Case Trial*
2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை உள்ள குற்றங்கள்

*இரண்டு வகைகள்:*
Police report case
Complaint case

*🔹 3. Summons Case Trial*
குறைந்த தண்டனை உள்ள குற்றங்கள் (2 ஆண்டுகள் கீழ்)

*எளிய நடைமுறை*
➡️ Formal charges தேவையில்லை

*🔹 4. Summary Trial*
சிறிய குற்றங்களுக்கு விரைவான விசாரணை

*உதாரணம்:*
போக்குவரத்து விதிமீறல்
சிறிய அபராத வழக்குகள்

*🔷 முக்கிய வித்தியாசம் (Quick Comparison)*
Trial வகை
குற்றம்
நீதிமன்றம்
நடைமுறை
Sessions Trial
மிகப்பெரிய குற்றம்
Sessions Court
முழு நடைமுறை
Warrant Case
2+ ஆண்டுகள்
Magistrate
Detailed
Summons Case
2 ஆண்டுகள் கீழ்
Magistrate
Simple
Summary Trial
சிறிய குற்றம்
Magistrate
Fast
*🔷 எளிய நினைவுக் குறிப்பு*
👉 Serious → Sessions Trial
👉 Medium → Warrant Case
👉 Small → Summons Case
👉 Very Small → Summary Trial

31/03/2026

*Thanks. Advocates Associates.

வாரிசுதாரர்களுக்கு சொத்து கிடைக்குமா தந்தை உயிரோட இருக்கும்போதே சொத்தில் பங்கு கிடைக்குமா?*

பரம்பரை சொத்தில் பிள்ளைகளுக்கான உரிமைகள் உண்டா?

ஒரு சொத்து நான்கு தலைமுறைகளாகப் பிரிக்கப்படாமல் என்னாகும்?

ஒரு சொத்தின் மீது உரிமை கோருவதற்கு முன்பாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? என்பதையெல்லாம் பொதுமக்கள் அறிந்து வைத்து கொள்ள வேண்டி உள்ளது..

அவைகளை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்

பரம்பரைச் சொத்து விவகாரங்களில் பலரும் கவனிக்க தவறும் முக்கியமான விஷயம், பாகப்பிரிவினை (Partition) ஆகும். ஒரு சொத்து இந்து கூட்டு குடும்ப (HUF) சொத்தாக இருந்து, பிரிக்கப்படாமல் தலைமுறைகளாக வந்திருந்தால்தான் அது பரம்பரை சொத்தாகக் கருதப்படும்...

ஒருவேளை பாகப்பிரிவினை செய்யப்பட்டு, தந்தைக்கு கிடைத்த பங்கு அவருடைய தனிப்பட்ட சொத்தாக மாறும்..

அதாவது அது சுயார்ஜிதச் சொத்தாகவே கருதப்படும்.

இத்தகைய நுணுக்கமான மாற்றங்களைச் சாதாரண மக்கள் புரிந்துகொள்வது கடினம்.

பூர்வீக சொத்து - பாகப்பிரிவினை
அதனால் ஒரு சொத்தின் மீது உரிமை கோருவதற்கு முன்பாக அந்தச் சொத்தின் வில்லங்கச் சான்றிதழ் (EC), பட்டா மாறுதல் விவரங்கள் மற்றும் முந்தைய பாகப்பிரிவினை ஆவணங்களைச் சரிபார்ப்பது அவசியம்.

சட்டங்கள் எவ்வளவுதான் உரிமைகளை வழங்கினாலும், ஒரு குடும்பத்தின் அமைதி கெடாமல் அந்த சொத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது..

அதேபோல, Ancestral Property என்று சொல்லப்படும் பரம்பரைச் சொத்து , Self-acquired Property என்று சொல்லப்படும் சுயார்ஜிதச் சொத்து ஆகிய இரண்டிற்கும் இடையிலான சட்ட வேறுபாடுகளை மக்கள் தெளிவாகப் புரிந்துகொள்வது அவசியம்.

பரம்பரை சொத்து சட்டப்படி, ஒரு சொத்து பரம்பரைச் சொத்து என்று கருதப்படுவதற்கு, அது பொதுவாக இந்து கூட்டு குடும்ப (HUF) சொத்தாக இருந்து, பல தலைமுறைகளாக பிரிக்கப்படாமல் வந்திருக்க வேண்டும் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்..

4 தலைமுறை' என்பது ஒரு பொதுவான விளக்கம் மட்டுமே, இறுதி முடிவு ஆவணங்கள் மற்றும் குடும்பப் பிரிவினை நிலையைப் பொறுத்தது.

இத்தகைய சொத்தில் ஒரு குழந்தை பிறந்த உடனே அதற்கு சமமான உரிமை கிடைத்துவிடுகிறது.

2005ம் ஆண்டின் சட்ட திருத்தத்திற்கு பிறகு, இதில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம உரிமை உண்டு என்பதை சுப்ரீம் கோர்ட் பல தீர்ப்புகளில் உறுதிப்படுத்தியுள்ளது.

எனவே, அந்த சொத்து உண்மையில் பரம்பரைச் சொத்தாகவும், ஏற்கனவே பாகப்பிரிவினை செய்யப்படாததாகவும் இருந்தால், தந்தை உயிருடன் இருக்கும்போதே பிள்ளைகள் அதில் தங்களின் பங்கைக் கோர முடியும்.

சுயார்ஜித சொத்து இருந்தாலும் நடைமுறையில் பலரும் குழப்பமடைவது சுயார்ஜிதச் சொத்து விஷயத்தில்தான்.

ஒரு தந்தை தனது சொந்த உழைப்பில் வாங்கிய சொத்து அல்லது பாகப்பிரிவினைக்கு பிறகு, அவருக்குக் கிடைத்த பங்கு பொதுவாக அவரின் தனிப்பட்ட சொத்தாகக் கருதப்படும்..

அதில் பிள்ளைகளுக்குப் பிறப்பால் உரிமை கிடையாது.

அத்தகைய சொத்துக்களை தந்தை தனது விருப்பப்படி யாருக்கு வேண்டுமானாலும் உயில் எழுதி வைக்கவோ அல்லது விற்கவோ முழு அதிகாரம் பெற்றுள்ளார்.

தந்தை உயில் ஏதும் எழுதாமல் இயற்கை எய்தினால் மட்டுமே, அந்த சொத்து பிள்ளைகளுக்கு வாரிசுரிமை அடிப்படையில் வந்து சேரும்.

பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம்
எனவே, குடும்ப உறவுகளில் இவையெல்லாம் ஏற்படுத்தும் தாக்கத்தையும் கவனிக்க வேண்டும்.

சொத்துரிமை என்பது வெறும் காகித ஆவணம் மட்டுமல்ல, அது ஒரு குடும்பத்தின் பாதுகாப்பையும் சார்ந்தது.

பிள்ளைகள் பிறப்பாலேயே உரிமை பெறுகிறார்கள் என்ற சட்டம், பெண்களுக்குப் பொருளாதார சுதந்திரத்தை வழங்கியுள்ளது.

அதே சமயம், சொத்துக்காகப் பெற்றோரைத் துன்புறுத்தும் போக்குகளும் ஆங்காங்கே நிகழ்வதை மறுக்க முடியாது.

சட்ட நுணுக்கங்களைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் தன்னிச்சையாக முடிவெடுப்பது சில நேரங்களில் தேவையற்ற நீதிமன்ற வழக்குகளுக்கு கொண்டு சென்றுவிடும்..

அதனால் ஒரு சொத்து உண்மையில் பரம்பரைச் சொத்தா அல்லது தந்தையின் தனிப்பட்ட சொத்தா என்பதை ஆவணங்கள் மூலம் உறுதிப்படுத்துவது மிக முக்கியம்.

Address

Kannan Nagar 2 Nd Main Road
Chennai
600091

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm
Sunday 10am - 2pm

Telephone

+919445991495

Website

Alerts

Be the first to know and let us send you an email when Advocates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Advocates:

Share