Advocate Chennai

Advocate Chennai Advocates in Chennai

தத்தெடுக்கப்பட்ட குழந்தை பிறந்த குடும்பத்தின் சொத்தில் பங்கு கோர முடியுமா? தெலுங்கானா உயர் நீதிமன்றம் சமீபத்தில் நடந்த ஒ...
16/07/2023

தத்தெடுக்கப்பட்ட குழந்தை பிறந்த குடும்பத்தின் சொத்தில் பங்கு கோர முடியுமா?

தெலுங்கானா உயர் நீதிமன்றம் சமீபத்தில் நடந்த ஒரு வழக்கில் தத்தெடுக்கப்பட்ட குழந்தைக்கு பிறந்த குடும்பத்தின் சொத்தில் பங்கு கோர உரிமை இல்லை என்று தெரிவித்தது. தத்தெடுப்பதற்கு முன் சொத்துப் பகிர்வு செய்யப்பட்டு தத்தெடுக்கப்பட்ட நபருக்கு சொத்து ஒதுக்கப்பட்டால் மட்டுமே அந்த பங்கு சொத்தை தத்தெடுத்த குடும்பத்திற்கு கொண்டு செல்ல முடியும்.

குழந்தையின் உயிரியல் தாய் அனுமதித்தால் பிறப்புச் சான்றிதழில் இறந்த உயிரியல் தந்தையின் பெயருக்குப் பதிலாக வளர்ப்பு தந்தைய...
18/08/2020

குழந்தையின் உயிரியல் தாய் அனுமதித்தால் பிறப்புச் சான்றிதழில் இறந்த உயிரியல் தந்தையின் பெயருக்குப் பதிலாக வளர்ப்பு தந்தையின் பெயரை மாற்ற முடியுமா ?

சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய ஒரு தீர்ப்பில், ஒரு சிறுமியின் பிறப்புச் சான்றிதழில் இறந்த உயிரியல் தந்தையின் பெயருக்குப் பதிலாக வளர்ப்பு தந்தையின் பெயரை மாற்ற நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த வழக்கில் வளர்ப்பு தந்தை, சிறுமியின் உயிரியல் தாயின் இரண்டாவது கணவர் ஆவார்.

விவாகரத்து நடவடிக்கைகள் பின்வரும்  இரண்டு நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் நடைபெறலாம்:1.பரஸ்பர விவாகரத்து என்பது பிரிவினைக...
02/07/2020

விவாகரத்து நடவடிக்கைகள் பின்வரும் இரண்டு நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் நடைபெறலாம்:

1.பரஸ்பர விவாகரத்து என்பது பிரிவினைக்கான சட்டபூர்வமான செயல்முறையாகும், கணவன்-மனைவி இருவரும் திருமணத்திற்குப் பிறகு தங்கள் சொந்த விருப்பத்துடன் பிரிந்து செல்ல விரும்பினால், விவாகரத்து பரஸ்பர சம்மதத்துடன் அழைக்கப்படுகிறது. கணவன்-மனைவி இருவரும் பரஸ்பர ஒப்புதலால் விவாகரத்துக்கு விண்ணப்பிக்கலாம்.

2.பரஸ்பர அனுமதியின்றி போட்டியிட்ட விவாகரத்து அல்லது விவாகரத்து வாழ்க்கைத் துணை (கணவன் அல்லது மனைவி) இருவரின் முன் அனுமதியின்றி தாக்கல் செய்யப்படுகிறது. இத்தகைய விவாகரத்து மனுவை தாக்கல் செய்வதற்கான பொதுவான காரணம் கொடுமை, விபச்சாரம், வெளியேறுதல், மாற்றம், மனநல கோளாறு, தொற்று நோய், மரணம்.

மனைவி உயிருடன் இருக்கும் போது, வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தும் கணவர் தன் மனைவிக்கு பராமரிப்பு தொகை கொடுக்க வேண்டும...
21/05/2020

மனைவி உயிருடன் இருக்கும் போது, வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தும் கணவர் தன் மனைவிக்கு பராமரிப்பு தொகை கொடுக்க வேண்டுமா?

முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல், வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்துவது, நியாயமா, இல்லையா என்பதை, பின் முடிவு செய்யலாம். மனைவியை பிரிந்த கணவர், மாதம் தோறும், பராமரிப்பு கட்டணத்தை மனைவிக்கு கொடுக்க வேண்டும் என்று மும்பை உயர்நீதிமன்றம் ஒரு வழக்கில் தெரிவித்தது.

விரும்பி உடலுறவு கொள்வது பலாத்காரம் ஆகாது உச்சநீதிமன்றம்.ஆணும், பெண்ணும் ஒருத்தருக்கொருத்தர் விரும்பி உடன்பட்டு உடலுறவு ...
04/01/2019

விரும்பி உடலுறவு கொள்வது பலாத்காரம் ஆகாது உச்சநீதிமன்றம்.
ஆணும், பெண்ணும் ஒருத்தருக்கொருத்தர் விரும்பி உடன்பட்டு உடலுறவு வைத்து கொண்டால் அது பலாத்காரம் ஆகாது என்று சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. மகாராஷ்ட்டிராவில் மணம் முடிக்காமல் டாக்டருடன் இணைந்து வாழ்ந்தபோது, அவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக நர்ஸ் ஒருவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

குடும்பத்தில் கள்ளத்தொடர்பு இருந்தால் டைவர்ஸ் கேட்க முடியும்கள்ளத்தொடர்பு இருந்தால் கணவனோ அல்லது மனைவியோ விவாகரத்து கோரல...
02/10/2018

குடும்பத்தில் கள்ளத்தொடர்பு இருந்தால் டைவர்ஸ் கேட்க முடியும்

கள்ளத்தொடர்பு இருந்தால் கணவனோ அல்லது மனைவியோ விவாகரத்து கோரலாம் என உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின் 497வது பிரிவை நீக்கக் கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

கள்ளக்காதல் குற்றமில்லை.. 497வது பிரிவு ரத்து.. சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்புடெல்லி: சர்ச்சைக்குரிய இந்திய தண்டனை சட்ட...
30/09/2018

கள்ளக்காதல் குற்றமில்லை.. 497வது பிரிவு ரத்து.. சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

டெல்லி: சர்ச்சைக்குரிய இந்திய தண்டனை சட்டமான சட்ட பிரிவு 497ஐ நீக்ககோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை அளித்து வருகிறது. பெண்ணின் கணவர் என்பவர் அவருக்கு எஜமானர் அல்ல. திருமண பந்தத்திற்கு அப்பாலான தகாத உறவு குற்றமில்லை. அது தற்கொலைக்குத் தூண்டப்படாத வரை என்று தீர்ப்பை வாசிக்கும் தலைை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்துள்ளார். இந்தியத் தண்டனைச் சட்டம் 497 என்பது ஒரு பெண் தனது கணவரின் அனுமதி அல்லாமல் வேறு ஒரு ஆணுடன் திருமணத்துக்கு அப்பாற்பட்டு உறவு கொண்டால் அது தண்டனைக்குரிய குற்றம் என்று கூறுகிறது. ஆனால் இதில் அந்த பெண் தண்டிக்கப்பட மாட்டார். ஆண் மட்டுமே தண்டிக்கப்படுவார்.

இந்த சட்டத்திற்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்டும். இந்த சட்டத்திற்குள் பெண்களும் கொண்டுவரப்படுவார்களா, இல்லை சட்டம் மொத்தமாக நீக்கப்படுமா, என்று இன்று தீர்ப்பு அளிக்கப்படும். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்குகிறது.

Address

Chennai
600001

Opening Hours

Monday 10am - 7pm
Tuesday 10am - 7pm
Wednesday 10am - 7pm
Thursday 10am - 7pm
Friday 10am - 7pm
Saturday 10am - 7pm

Telephone

+919597871860

Website

Alerts

Be the first to know and let us send you an email when Advocate Chennai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share