16/07/2023
தத்தெடுக்கப்பட்ட குழந்தை பிறந்த குடும்பத்தின் சொத்தில் பங்கு கோர முடியுமா?
தெலுங்கானா உயர் நீதிமன்றம் சமீபத்தில் நடந்த ஒரு வழக்கில் தத்தெடுக்கப்பட்ட குழந்தைக்கு பிறந்த குடும்பத்தின் சொத்தில் பங்கு கோர உரிமை இல்லை என்று தெரிவித்தது. தத்தெடுப்பதற்கு முன் சொத்துப் பகிர்வு செய்யப்பட்டு தத்தெடுக்கப்பட்ட நபருக்கு சொத்து ஒதுக்கப்பட்டால் மட்டுமே அந்த பங்கு சொத்தை தத்தெடுத்த குடும்பத்திற்கு கொண்டு செல்ல முடியும்.