திலகரெத்தினம் துஷ்யந்தன்

திலகரெத்தினம் துஷ்யந்தன் Official Page of Thilagaratnam Thusyanthan

இன்று செவ்வாய்க்கிழமை 07/07/2026 தம்பலகாமம் ஆதி கோணேஸ்வரா மகா வித்தியாலயத்தின் முன்னை நாள் அதிபர்கள் கௌரவிப்பு விழா நடைப...
07/07/2026

இன்று செவ்வாய்க்கிழமை 07/07/2026 தம்பலகாமம் ஆதி கோணேஸ்வரா மகா வித்தியாலயத்தின் முன்னை நாள் அதிபர்கள் கௌரவிப்பு விழா நடைபெற்றது. அங்கு கல்வி பணிபுரிந்த முன்னை நாள் அதிபர்களின் திருவிருவப் படங்களும் திறந்து வைக்கப்பட்டன . இன்று அதிபராக கடமையாற்றிய எனது தந்தை அமரர் குருகுல பூபால சிங்கம் திலகரெட்ணம் அவர்களின் திருவுருவ படத்தினை திரை நீக்கம் செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. இவ்வாறான நன்றி மறவாத சிறப்பு நிகழ்வை ஒழுங்கமைத்த பாடசாலை நிர்வாகத்துக்கும் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் பழைய மாணவர் சங்கத்துக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

இன்றையதினம் 01/07/2026 ) நவீன  உலகில் பாடசாலை மாணவர்களின்  இலத்திரனியல் கற்றல் செயல் திறனை அதிகரிக்கும் முகமாகதெரிவுசெய்...
01/07/2026

இன்றையதினம் 01/07/2026 ) நவீன உலகில் பாடசாலை மாணவர்களின் இலத்திரனியல் கற்றல் செயல் திறனை அதிகரிக்கும் முகமாக
தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைச் சமூகத்தினரின் வேண்டுகோளுக்கு அமைவாக திருகோணேஸ்வர ஆலய நிர்வாக சபையினரின் முன்னெடுப்பில் இலங்கை மனித நேய நம்பிக்கை நிதியத்தினரின் நிதி அனுசரனையில்
*வெருகல் பிரதேச மாவடிச்சேனை தி/மூ/கல்லடி ஸ்ரீ மலை நீலியம்மன் வித்தியாலய* பாடசாலைசமூகத்தினரிடம் *திறன் பலகை ( Smart Board )* ஒன்றும்
*கிளிவெட்டி தி/மூ/லிங்கபுரம் சரஸ்வதி வித்தியாலய* பாடசாலை சமூகத்தினரிடம் திறன் தொலைக்காட்சி ( Smart Television ) ஒன்றும் கையளிக்கப்பட்டது. இன்றைய நிகழ்வில் திருக்கோணேஸ்வர ஆலய நிர்வாக சபையின் தலைவர் , இலங்கை மனிதநேய நம்பிக்கை நிதியத்தின் இணைப்பாளர் மற்றும் பாடசாலைகளின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றார் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினரும் கலந்து சிறப்பித்தனர். மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக
அணுசரனை வழங்கிய இலங்கை மனித நேய நம்பிக்கை நிதியத்தினருக்கு மாணவர்கள் சார்பாக *நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்*

பிரதி தெட்சண கைலாசம் .

அலஸ்தோட்டம் ஸ்ரீ நாகம்மாள் அறநெறி பாடசாலையின் 23 ம் ஆண்டு நிறைவு தினம் இன்று கொண்டாடப்பட்டது. இந்து கலச்சார உத்தியோகதர் ...
21/06/2026

அலஸ்தோட்டம் ஸ்ரீ நாகம்மாள் அறநெறி பாடசாலையின் 23 ம் ஆண்டு நிறைவு தினம் இன்று கொண்டாடப்பட்டது. இந்து கலச்சார உத்தியோகதர் , பிரதேச அரசியல் பிரமுகர்கள் , சமய பெரியவர்கள், ஆசிரியர்கள், சமூக சேவையாளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர், நானும் அழைப்பின் பெயரில் விருந்தினராக கலந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளை கண்டு கழித்தேன். இந்த அறநெறி மாணவர்கள் ஆசிரியர்கள் நிர்வாகிகள் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுதல்களும் வாழ்த்துக்களும்.

தற்காலத்தில் மாணவர்களிடையே கல்வியுடன் இணைந்த வகையில் பொழுதுபோக்காக விளையாட்டுக்கான ஆர்வத்தினை அதிகரித்து ஆரோக்கியமான சமு...
18/06/2026

தற்காலத்தில் மாணவர்களிடையே கல்வியுடன் இணைந்த வகையில் பொழுதுபோக்காக விளையாட்டுக்கான ஆர்வத்தினை அதிகரித்து ஆரோக்கியமான சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் நீனாக்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இளைஞர் யுவதிகளுக்கும் சிவனருள் இளந்தளிர் கல்வி நிலைய வளாகத்தில்
சிவனருள் பவுண்டேசன் அமைப்பின் முன்னெடுப்பில் நெதர்லாந்து றொட்டறம் தமிழ் கால்பந்தாட்ட அணியின் நிதி அனுசரணையில் அமைக்கப்பட்ட விளையாட்டு மைதான கையளிப்பு நிகழ்வில் இன்று வியாழக்கிழமை 18.06.2026 மாலை பிரதம விருந்தினராகக் கலந்து விளையாட்டு மைதான பயன்பாட்டை ஆரம்பித்து வைத்து சிறப்பித்த தருணம்.

திருக்கோணேஸ்வர ஆலயத்தினால் புரியப்படும் கல்வி அறப்பணிகளில் ஒன்றாக இன்றையதினம் 17.06.2026 2026  க. பொ. த உயர்தர கணித விஞ்...
17/06/2026

திருக்கோணேஸ்வர ஆலயத்தினால் புரியப்படும் கல்வி அறப்பணிகளில் ஒன்றாக இன்றையதினம் 17.06.2026
2026 க. பொ. த உயர்தர கணித விஞ்ஞானப் பிரிவில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள திருகோணமலை கல்வி வலயத்துக்குட்பட்ட 09 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்குரிய 1840 மாதிரிப்பரீட்சை வினாப்பத்திரங்களும் மூதூர் வலயத்திற்குட்பட்ட
05 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்குரிய 558 மாதிரிப்பரீட்சை வினப்பத்திரங்களும் இலங்கை மனிதநேய நம்பிக்கை நிறுவத்தினரின் அனுசரனையில் திருக்கோணேஸ்வரர் ஆலய பரிபாலனசபையினரின் முன்னெடுப்பில் திருகோணமலை வலய கல்வி அதிகாரிகளிடமும் மூதூர் வலய கல்வி அதிகாரிகளிடமும் வழங்கி வைக்கப்பட்டது.

பிரதி செய்யப்பட்டது தெட்சண கைலாசம்

சங்கீர்த்சனும்கு பிணை கிடைத்துள்ளது இந்த செயலுக்கு துணை நின்ற அனைவருக்கும் எமது நன்றிகள். இது எவ்வாறு சாத்தியமானது. ஆராய...
12/06/2026

சங்கீர்த்சனும்கு பிணை கிடைத்துள்ளது இந்த செயலுக்கு துணை நின்ற அனைவருக்கும் எமது நன்றிகள். இது எவ்வாறு சாத்தியமானது. ஆராயலாம்.

இலங்கையின் Prevention of Terrorism Act கீழ் பிணை வழங்கும் சட்ட நிலை மற்றும் வழக்கை சாதாரண குற்றவியல் சட்டத்திற்கு மாற்றும் நடைமுறை – ஒரு ஆய்வு

சுருக்கம் (Abstract)

பயங்கரவாத தடைச் சட்டம் (PTA) இலங்கையில் தேசிய பாதுகாப்பை நோக்கமாகக் கொண்ட விசேட சட்டமாகும். இதன் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணை வழங்கும் நடைமுறை கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், நீதித்துறையின் விளக்கவுரைகள் மற்றும் அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்புகள் மூலம் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் பிணை வழங்கப்பட்ட முன்னுதாரணங்கள் உள்ளன. மேலும், PTA கீழ் தொடுக்கப்பட்ட வழக்கை சாதாரண Penal Code கீழ் மாற்றுவதற்கான சட்ட அதிகாரம் யாருக்கு உண்டு, அது எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதையும் இக்கட்டுரை ஆய்வு செய்கிறது.

I. சட்டப் பின்னணி

PTA (Act No. 48 of 1979) தேசிய பாதுகாப்பு சூழ்நிலையிலிருந்து உருவான விசேட சட்டமாகும். இது:
• நீண்டகால நிர்வாகத் தடுப்புக் காவல் (Detention Orders)
• பொலிஸ் ஒப்புதல் வாக்குமூலங்களுக்கு விசேட ஆதார மதிப்பு
• பிணை வழங்கும் அதிகாரத்தில் கட்டுப்பாடு

போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.

பிணை தொடர்பான கட்டுப்பாடுகள் வழக்கமாக உயர் நீதிமன்றத்தின் (High Court) அதிகாரத்திற்கு உட்பட்டவை. PTA கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னர், சாதாரண மஜிஸ்திரேட் cours-க்கு பிணை வழங்கும் அதிகாரம் இல்லை.

II. அரசியலமைப்புச் சட்டத் தலையீடு மற்றும் பிணை

1. அடிப்படை உரிமைகள்

இலங்கை அரசியலமைப்பின் கட்டுரை 13 (1), (2), (5) ஆகியவை கைது, நீதிமன்ற ஆஜர்படுத்தல், குற்றமற்றவர் என்ற முன் கருதுகோள் ஆகியவற்றை உறுதி செய்கின்றன.

Namal Kumara v. Attorney General வழக்கில், நீண்டகாலமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் காவலில் வைப்பது நியாயமான நடைமுறைக்கு முரணானதாக உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது. நீதிமன்றம், தேசிய பாதுகாப்பு காரணம் இருந்தாலும், “indefinite detention” ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெளிவுபடுத்தியது.

2. Prima Facie ஆதாரம் – நீதிமன்ற அணுகுமுறை

Sivalingam Kajendran v. Attorney General வழக்கில், குற்றச்சாட்டுகள் ஆதாரமின்றி தொடர முடியாது என மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. PTA கீழ் வழக்கு தொடர்வதற்கு குறைந்தபட்ச ஆதார நிலை (prima facie threshold) அவசியம் என வலியுறுத்தப்பட்டது.

இத்தீர்ப்பு PTA வழக்குகளிலும் நீதித்துறை கண்காணிப்பு செயல்படுகிறது என்பதற்கான முன்னுதாரணமாக பார்க்கப்படுகிறது.

3. மனிதாபிமான காரணிகள்

உயர் நீதிமன்றம் சில வழக்குகளில்:
• கடுமையான உடல்நிலை
• நீண்ட விசாரணை தாமதம்
• சாட்சிகள் தயாராக இல்லாமை

போன்ற காரணிகளின் அடிப்படையில், கடுமையான நிபந்தனைகளுடன் பிணை வழங்கியுள்ளது.

III. PTA வழக்கை சாதாரண குற்றவியல் சட்டத்திற்கு மாற்றும் அதிகாரம்

1. Attorney General-ன் அதிகாரம்

Attorney General’s Department-க்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் அரசியலமைப்புச் சட்ட அதிகாரம் உண்டு.

AG-க்கு:
• PTA குற்றச்சாட்டை வாபஸ் பெற
• குற்றச்சாட்டை மாற்ற (amend indictment)
• அதே சம்பவத்தை Penal Code கீழ் தொடர

சட்ட அதிகாரம் உண்டு.

இது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (Code of Criminal Procedure Act) பிரிவுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

2. நீதிமன்ற தலையீடு

Court of Appeal of Sri Lanka-இல் Writ Jurisdiction (Certiorari, Mandamus)
Supreme Court of Sri Lanka-இல் Fundamental Rights Petition

தாக்கல் செய்து:
• PTA பயன்படுத்தியிருப்பது சட்டவிரோதம்
• தேசிய பாதுகாப்பு அளவுகோல் பூர்த்தி செய்யப்படவில்லை

என்று வாதிடலாம்.

நீதிமன்றம்:
• கைது ரத்து செய்யலாம்
• வழக்கு தொடர்வதை கட்டுப்படுத்தலாம்
• அல்லது சட்டரீதியான மாற்றத்துக்கு வழிகாட்டலாம்

IV. அரசியல் செயல்பாட்டாளர்களின் பங்கு

அரசியல் செயல்பாட்டாளர்கள் நேரடியாக வழக்கை மாற்ற முடியாது. ஆனால்:
1. Attorney General-க்கு representation அளித்தல்
2. மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிடுதல்
Human Rights Commission of Sri Lanka
3. பாராளுமன்ற மேற்பார்வை மற்றும் பொது அழுத்தம்
4. சட்ட உதவி வழங்குதல்

மூலம் மறைமுக பாதிப்பு ஏற்படுத்த முடியும்.

V. பகுப்பாய்வு

PTA ஒரு விசேட சட்டம் என்றாலும், அது முழுமையான நீதிமன்றத் தளர்வு அற்ற சட்டம் அல்ல. நீதித்துறை:
• ஆதார பரிசீலனை
• தாமதக் கண்காணிப்பு
• அடிப்படை உரிமை பாதுகாப்பு

மூலம் சமநிலை ஏற்படுத்த முயற்சித்துள்ளது.

PTA வழக்கை சாதாரண Penal Code கீழ் மாற்றுவது முழுமையாக Attorney General-ன் தீர்மான அதிகாரத்திற்கு உட்பட்டது. நீதிமன்றத் தலையீடு வழக்கமான வழிமுறையாக அல்ல; exceptional jurisdiction ஆகும்.

முடிவுரை

Prevention of Terrorism Act கீழ் பிணை வழங்குவது கடுமையான சட்ட அளவுகோல்களுக்குட்பட்டது. இருப்பினும்:
• நீண்டகால காவல்
• ஆதாரமின்மை
• அடிப்படை உரிமை மீறல்

போன்ற சூழ்நிலைகளில் நீதிமன்றங்கள் தலையிட்டு பிணை வழங்கியுள்ளன.

மேலும், PTA வழக்கை Penal Code கீழ் மாற்றுவதற்கான அதிகாரம் Attorney General’s Department-க்கு மட்டுமே உள்ளது; அரசியல் செயல்பாட்டாளர்கள் சட்டரீதியான மற்றும் பொது கொள்கை அழுத்தம் மூலமே பாதிப்பை ஏற்படுத்த முடியும்.

இந்த அரசியல் அழுத்தத்தை புரிந்து சங்கீர்த்சனனின் விடுதலைக்கு உதவிய அனைவருக்கும் நன்றிகள்

இன்று 11/06/2026 வியாழக்கிழமை Facilitating Actions for Community Transformation (FACT) நிறுவனத்தின் Research Report Loun...
11/06/2026

இன்று 11/06/2026 வியாழக்கிழமை Facilitating Actions for Community Transformation (FACT) நிறுவனத்தின் Research Report Lounch Event in the Topic of “Alienated by the State “ எனும் தலைப்பில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் சுவிட்ஸ்லாந்து நாட்டின் உயர்ஸ்தானிகர் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். கிழக்கு மாகாணத்தில் அரசினால் கையக படுத்தப்பட்ட காணிகள் தொடர்பான விடயங்கள் இந்த வெளியீட்டில் இடம்பெற்றுள்ளது. கிழக்கு மாகாண காணி ஆணையாளர் , உதவி அரசாங்க அதிபர் , பிரதேச செயலர் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

நேற்றய தினம் 04/06/2026 வியாழக்கிழமை கிண்ணியா ஆலங்கேணி விநாயகர் மகாவித்தியாலயத்தின் பெற்றார் ஆசிரியர் சங்கம் மற்றும் பழை...
05/06/2026

நேற்றய தினம் 04/06/2026 வியாழக்கிழமை கிண்ணியா ஆலங்கேணி விநாயகர் மகாவித்தியாலயத்தின் பெற்றார் ஆசிரியர் சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் அழைப்பின் பெயரில் பாடசாலை அபிவிருத்தி மற்றும் கற்றல் திறன் விருத்தி தொடர்பான கலந்துரயாடலில் கலந்து கொண்டு எனது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டேன். இந்த பாடசாலை ஆசிரியர் வள பற்றாக்குறையால் புலமை பரிசில் பரீட்சையில் பின்னோக்கி செல்வது கவலையளிக்கிறது . பௌதீக வள பற்றாக்குறை மற்றும் சாதாரண அடிப்படை வசதிகளற்ற நூலகம் போன்ற விடயங்கள் பூர்த்தி செய்ய வேண்டிய தேவையில் உள்ளன.

சங்கீதன் என்னும் தமிழ் சொல்லிசை பாடகர்  பயங்கர வாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்பிருக்கிறார்.  விடுதலை புலிகள்...
03/06/2026

சங்கீதன் என்னும் தமிழ் சொல்லிசை பாடகர் பயங்கர வாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்பிருக்கிறார். விடுதலை புலிகள் தொடர்புல் மறைமுக எழுச்சி பாடல் பாடியதாக கூறியே இவர் பயங்கர வாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் சிங்கள் ஊடகங்கள் சிங்கள இனவாத தமிழ் இன வெறுப்பை உச்ச கட்டமாக கொட்டுகின்றன. அவர்கள் மேல் இந்த பயங்கர வாத தடை சட்டம் பாயாது. இவ்வாறு ஒரு சட்டம் ஒரே விடயத்தில் வெவ்வேறு கண்களை கொண்டு பார்க்கிறது. சங்கீதனின் விடுதலைக்கு குரல் கொடுப்போம்

திருக்கோணேஸ்வர ஆலயத்தினால் புரியப்படும் கல்வி அறப்பணிகளில் ஒன்றாக பாடசாலையின் பௌதீக வள பற்றாக்குறைகளை கருத்தில் கொண்டு ந...
31/05/2026

திருக்கோணேஸ்வர ஆலயத்தினால் புரியப்படும் கல்வி அறப்பணிகளில் ஒன்றாக பாடசாலையின் பௌதீக வள பற்றாக்குறைகளை கருத்தில் கொண்டு நவீன கற்றல் முறை செல்திறனை அதிகருத்து மாணவர்களின் அடைவு மட்டத்தினை அதிகரிக்கும் நோக்கில் திருகோணேஸ்வர ஆலய நிர்வாக சபையின் நெறிப்படுத்தலில் திறன் பலகை (Smart Board) ஒன்று கடந்த 27/5/2026 புதன்கிழமை உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் பாடசாலை சமூகத்திடம் கையளிக்கப்பட்டது . இதற்கான திறன் பலகையினை மனித நேய நம்பிக்கை நிதியத்தினர் அன்பளிப்பு செய்திருந்தனர்

பிரதிசெய்யப்பட்டது தெட்சண கைலாசம்

Address

Court Road
Trincomalee
31000

Alerts

Be the first to know and let us send you an email when திலகரெத்தினம் துஷ்யந்தன் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share