வழக்கறிஞர் சுப.கார்த்திகேயன்

  • Home
  • India
  • Namakkal
  • வழக்கறிஞர் சுப.கார்த்திகேயன்

வழக்கறிஞர் சுப.கார்த்திகேயன் சமூக ஆர்வலர்

டாஸ்மாக்கில் MRP-ஐ மீறி கூடுதல் விலை வசூல் — கடுமையான நடவடிக்கை தேவை!தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு MRP-ஐ...
19/05/2026

டாஸ்மாக்கில் MRP-ஐ மீறி கூடுதல் விலை வசூல் — கடுமையான நடவடிக்கை தேவை!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு MRP-ஐ விட கூடுதலாக ₹10, ₹20, ₹30 வரை வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். சமூக ஊடகங்களில் வீடியோ ஆதாரங்கள் வெளியாகின்றன. செய்தி ஊடகங்களிலும் இதுபற்றி செய்திகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.

தேர்தல் பிரச்சாரத்தின் போது “பாட்டிலுக்கு கூடுதல் ₹10 வசூல்” என்பது பெரிய பிரச்சினையாக பேசப்பட்டது. புதிய அரசு வந்த பிறகு, MRP விலைக்கே மதுபானம் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருந்தது. ஆனால் இன்னும் பல இடங்களில் கூடுதல் விலை வசூல் தொடர்கிறது என்ற புகார்கள் வந்துகொண்டே இருந்தால், அது அரசின் அறிவிப்பை மதிக்காத செயல் மட்டுமல்ல; மக்களின் நம்பிக்கையையும் பாதிக்கும் செயல்.

ஒரு தனியார் கடையில் MRP-ஐ மீறி விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அப்படியிருக்க, அரசு நிறுவனமான டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலை வசூல் நடந்தால், அது இன்னும் கடுமையாக பார்க்கப்பட வேண்டும்.

“சஸ்பெண்ட்” மட்டும் போதாது.
மீண்டும் அதே தவறு நடக்காமல் இருக்க, பொறுப்பான கடுமையான நடவடிக்கை அவசியம்.

சட்ட நண்பன் இயக்கம் சார்பாக வைக்கும் கோரிக்கைகள்:

1. டாஸ்மாக் கடைகளில் MRP-ஐ மீறி கூடுதல் விலை வசூலை உடனடியாக தடுக்க வேண்டும்.

2. கூடுதல் விலை வசூலித்த கடை ஊழியர்கள்மீது உடனடி துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3. புகார் நிரூபிக்கப்பட்டால், suspension மட்டும் அல்லாமல் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

4. கூடுதல் வசூல் தொடர்ந்து நடக்கும் கடைகளின் மேற்பார்வையாளர்கள், மாவட்ட மேலாளர்கள் மீதும் பொறுப்பு நிர்ணயிக்க வேண்டும்.

5. ஒவ்வொரு டாஸ்மாக் கடையிலும் MRP விலைப்பட்டியல் பொதுமக்கள் தெளிவாக பார்க்கும் இடத்தில் கட்டாயம் ஒட்டப்பட வேண்டும்.

6. ரசீது வழங்காமல் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

7. பொதுமக்கள் புகார் அளிக்க தனி WhatsApp எண் / Toll Free எண் / QR complaint system தெளிவாக அறிவிக்கப்பட வேண்டும்.

8. கூடுதல் விலை வசூல் புகார்களில் இதுவரை எத்தனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதையும் அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

அரசின் அறிவிப்பை அரசு நிறுவன ஊழியர்களே மதிக்கவில்லை என்ற நிலை உருவானால், அதை மக்கள் எப்படி நம்புவார்கள்?

கூடுதல் விலை வசூல் என்பது சாதாரண தவறு அல்ல.
அது பொதுமக்களிடமிருந்து அநியாயமாக பணம் பறிப்பது.

இந்த விவகாரத்தில் அரசு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
கடுமையான நடவடிக்கை எடுத்தால்தான் இந்த முறைகேடு நிற்கும்.
ஒருவர் கூடுதல் விலை வாங்கினால் வேலை போய்விடும் என்ற பயம் உருவானால்தான் அடுத்தவர் யோசிப்பார்.

MRP-ஐ மீறிய டாஸ்மாக் விற்பனைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்!
கூடுதல் வசூல் செய்பவர்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுங்கள்!
மக்களின் பணத்தை அநியாயமாக பறிக்க அனுமதிக்காதீர்கள்!

சட்ட நண்பன் இயக்கம்
சட்ட விழிப்புணர்வு அமைப்பு

#சட்டநண்பன்_இயக்கம் #டாஸ்மாக் #கூடுதல்_வசூல் #ஊழல்_ஒழிப்பு #தமிழகஅரசு #மக்கள்_கோரிக்கை #சட்டவிழிப்புணர்வு

லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கு suspension மட்டும் போதாது — நிரூபிக்கப்பட்டால் கட்டாய பணி நீக்கம் வேண்டும்!தமிழகத்தில...
19/05/2026

லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கு suspension மட்டும் போதாது — நிரூபிக்கப்பட்டால் கட்டாய பணி நீக்கம் வேண்டும்!

தமிழகத்தில் காவல்துறை, வருவாய் துறை, உள்ளாட்சி துறை, பதிவு துறை, மின்சார வாரியம் உள்ளிட்ட பல அரசு துறைகளில் பொதுமக்களிடம் லஞ்சம் கேட்கும் சம்பவங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.

பல நேரங்களில் வீடியோ ஆதாரம், ஆடியோ ஆதாரம், DVAC trap, தொலைக்காட்சி செய்தி, சமூக ஊடகங்களில் வெளியான ஆதாரங்கள் இருந்தும், சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்கள் “சஸ்பெண்ட்” செய்யப்படுகிறார்கள். ஆனால் அதற்குப் பிறகு வழக்கு என்ன ஆனது? துறை விசாரணை என்ன ஆனது? குற்றம் நிரூபிக்கப்பட்டதா? பணி நீக்கம் செய்யப்பட்டார்களா? மீண்டும் பணியில் சேர்ந்தார்களா? — இதுபற்றி பொதுமக்களுக்கு தெளிவான தகவல் கிடைப்பதில்லை.

சஸ்பெண்ட் என்பது தண்டனை அல்ல; அது தற்காலிக நிர்வாக நடவடிக்கை மட்டுமே. லஞ்சம் வாங்கிய குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்த நபர் அரசு பணியில் தொடர தகுதியற்றவர் என கருதப்பட வேண்டும்.

சட்ட நண்பன் இயக்கம் சார்பாக தமிழக அரசுக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும் வைக்கும் கோரிக்கைகள்:

1. லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை suspension செய்து விடுவது மட்டும் போதாது.
2. வீடியோ ஆதாரம், trap ஆதாரம், பணம் கைப்பற்றிய ஆதாரம் போன்ற prima facie ஆதாரம் இருந்தால் உடனடியாக FIR பதிவு செய்ய வேண்டும்.
3. சம்பந்தப்பட்டவர்மீது Prevention of Corruption Act படி குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4. அதே நேரத்தில் தனியாக துறை விசாரணையும் காலவரம்புடன் நடத்தப்பட வேண்டும்.
5. குற்றம் நிரூபிக்கப்பட்டால் கட்டாயமாக பணி நீக்கம் செய்ய வேண்டும்.
6. லஞ்சம் வாங்கி பிடிபட்டவர்கள் மீண்டும் அதே துறையில் அல்லது பொதுமக்களுடன் நேரடி தொடர்பு உள்ள பணிகளில் அமர்த்தப்படக் கூடாது.
7. ஒவ்வொரு மாதமும் அரசு “லஞ்ச வழக்குகள் நடவடிக்கை அறிக்கை” வெளியிட வேண்டும்.
8. கடந்த 5 ஆண்டுகளில் லஞ்ச வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்கள் எத்தனை பேர்?
9. அவர்களில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் எத்தனை பேர்?
10. மீண்டும் பணியில் சேர்ந்தவர்கள் எத்தனை பேர்?
11. நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை?
12. துறை வாரியாகவும் மாவட்ட வாரியாகவும் இந்த விவரங்களை வெள்ளை அறிக்கையாக அரசு வெளியிட வேண்டும்.

பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு செல்வது சேவைக்காகத்தான்; லஞ்சம் கொடுக்க அல்ல.
ஒரு அரசு ஊழியர் சம்பளம் வாங்குவது மக்களுக்குச் சேவை செய்யத்தான்; மக்களை சுரண்ட அல்ல.

லஞ்சம் வாங்கினால் “சில நாட்கள் suspension, பின்னர் மீண்டும் joining” என்ற நிலை தொடர்ந்தால், அது ஊழலை ஒழிக்காது.
லஞ்சம் வாங்கினால் வேலை போய்விடும் என்ற உறுதியான பயம் உருவானால்தான், அடுத்தவர் லஞ்சம் கேட்க முன்பே யோசிப்பார்.

புதிய அரசை மக்கள் தேர்ந்தெடுத்தது மாற்றத்திற்காகத்தான்.
கடந்த காலங்களில் நடந்த அதே suspension-only நடைமுறை தொடரக்கூடாது.
இந்த அரசு ஊழலை ஒழிக்க உண்மையான முன்னுதாரணத்தை உருவாக்க வேண்டும்.

லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை வேண்டும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் கட்டாய பணி நீக்கம் வேண்டும்.
லஞ்ச வழக்குகளில் அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

சட்ட நண்பன் இயக்கம்
சட்ட விழிப்புணர்வு அமைப்பு

#சட்டநண்பன்_இயக்கம் #லஞ்சம் #ஊழல்_ஒழிப்பு #தமிழகஅரசு #பணி_நீக்கம் #மக்கள்_கோரிக்கை #சட்டவிழிப்புணர்வு

19/05/2026

செய்தியாளர் மீது வீடு புகுந்து தாக்குதல் — சட்ட நண்பன் இயக்கம் கடும் கண்டனம்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில், தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை அவரது வீட்டிற்குள் புகுந்து பாட்டிலால் தாக்கியதாக வெளியாகியுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது.

செய்தியாளர்கள் மீது நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலும், பத்திரிகை சுதந்திரத்திற்கும் ஜனநாயக குரலுக்கும் எதிரான கடுமையான அச்சுறுத்தலாகும்.

இந்த மனிதநேயமற்ற தாக்குதலை சட்ட நண்பன் இயக்கம் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தமிழக அரசு மற்றும் காவல்துறை உடனடியாக சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட செய்தியாளருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

செய்தியாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.
சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் கும்பல்களுக்கு எதிராக அரசு கடுமையாக செயல்பட வேண்டும்.

சட்ட நண்பன் இயக்கம்
சட்ட விழிப்புணர்வு அமைப்பு

#சட்டநண்பன்_இயக்கம் #செய்தியாளர்_மீது_தாக்குதல் #பத்திரிகை_சுதந்திரம் #முத்துப்பேட்டை #திருவாரூர் #தமிழ்நாடு #கடும்_கண்டனம்

வின்ஸ்டார் மோசடி வழக்கில் பெயர் இடம்பெற்ற நபருக்குஆளும் கட்சி மேடையில் அரசியல் மரியாதை வழங்கப்படுவது நியாயமா?சேலத்தைச் ச...
19/05/2026

வின்ஸ்டார் மோசடி வழக்கில் பெயர் இடம்பெற்ற நபருக்கு
ஆளும் கட்சி மேடையில் அரசியல் மரியாதை வழங்கப்படுவது நியாயமா?

சேலத்தைச் சேர்ந்த வின்ஸ்டார் இந்தியா நிறுவன மோசடி வழக்கில், ஆயிரக்கணக்கான பொதுமக்களின் முதலீட்டு பணம் தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

இப்படிப்பட்ட பொதுமக்களின் பணம் சம்பந்தப்பட்ட மிகப்பெரிய நிதி மோசடி குற்றச்சாட்டு உள்ள வழக்கில் பெயர் இடம்பெற்ற நபர், ஆளும் கட்சியில் இணைகிறார்.

அவருக்கு நிதி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அவர்கள் சால்வை அணிவித்து மரியாதை செய்கிறார்.

இது பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு எந்த செய்தியை கொடுக்கிறது?

“தூய்மை ஆட்சி” என்று பேசும் கட்சியில், நிதி மோசடி குற்றச்சாட்டு உள்ள நபர்கள் இவ்வாறு அரசியல் மரியாதை பெறும்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியில் நம்பிக்கை எப்படி உருவாகும்?

சட்டநண்பன் இயக்கத்தின் சார்பாக எங்கள் நேரடி கேள்விகள்:

1. வின்ஸ்டார் மோசடி வழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணம் திரும்ப கிடைக்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

2. இந்த வழக்கின் தற்போதைய நீதிமன்ற நிலை குறித்து அரசு மக்களுக்கு தெளிவுபடுத்துமா?

3. முடக்கப்பட்ட சொத்துகள் இருந்தால், அவை எப்போது சட்டப்படி பயன்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்?

4. நிதி மோசடி குற்றச்சாட்டு உள்ள வழக்கில் பெயர் இடம்பெற்ற நபர்களை ஆளும் கட்சியில் இணைக்கும் முன் பின்னணி சரிபார்ப்பு செய்யப்படுகிறதா?

5. பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீருக்கு பதில் சொல்லாமல், குற்றச்சாட்டு உள்ள நபர்களுக்கு அரசியல் மரியாதை வழங்குவது சரியானதா?

சட்டப்படி, வழக்கு முடியும் வரை யாரும் குற்றவாளி என இறுதியாக கருதப்பட முடியாது.

ஆனால், பொதுமக்களின் பணம் தொடர்பான மிகப்பெரிய மோசடி குற்றச்சாட்டு நிலவி வரும் நிலையில், அந்த வழக்கில் பெயர் இடம்பெற்றவர்களுக்கு அரசியல் மேடையில் மரியாதை வழங்குவது சமூகநீதிக்கும், மக்கள்நீதிக்கும் எதிரான செயலாக மக்கள் பார்க்கிறார்கள்.

அரசியல் மரியாதை பெறுவதற்கு முன்,
பாதிக்கப்பட்ட மக்களின் பணத்துக்கும் கண்ணீருக்கும் பதில் சொல்ல வேண்டும்.

மக்களின் பணம் அரசியல் விளையாட்டு பொருள் அல்ல.
மக்களின் நம்பிக்கை அதிகாரத்தின் அலங்காரம் அல்ல.

#சட்டநண்பன்இயக்கம்
#வின்ஸ்டார்மோசடி
#சேலம்
#பொதுமக்கள்நீதி
#நிதிமோசடி
#தமிழகஅரசியல்




18/05/2026

சட்ட நண்பன் இயக்கத்தில் இணைந்து செயல்பட www.sattananban.org

சட்ட நண்பன் இயக்கம் – அறிமுகம் !சட்ட நண்பன் இயக்கம் என்பது எளிய மக்களிடம் அடிப்படை சட்ட விழிப்புணர்வை கொண்டு சேர்க்க வேண...
18/05/2026

சட்ட நண்பன் இயக்கம் – அறிமுகம் !

சட்ட நண்பன் இயக்கம் என்பது எளிய மக்களிடம் அடிப்படை சட்ட விழிப்புணர்வை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் சட்ட விழிப்புணர்வு அமைப்பு.

சட்டம் தெரியாத பாமர மக்களுக்கு அடிப்படை சட்ட அறிவு, உரிமைகள், கடமைகள், அரசு அலுவலக நடைமுறைகள், பொதுநலப் பிரச்சனைகளுக்கான சட்ட ரீதியான வழிகள் போன்றவற்றை எளிமையாக எடுத்துச் செல்லும் நோக்கத்தில்தான் சட்ட நண்பன் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

சட்ட நண்பன் இயக்கத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கு எந்த கட்டணமும், சந்தாவும் வசூலிக்கப்படாது. உறுப்பினர் சேர்க்கை முழுமையாக இலவசம். உறுப்பினராக சேர விரும்புபவர்கள் இணையதளத்தின் மூலம் மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

பதிவு செய்யும் போது உண்மையான விவரங்கள் மட்டுமே வழங்க வேண்டும். பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் தெளிவாகவும், plain background-ல் clean and neat ஆகவும் இருக்க வேண்டும். புகைப்படம் தெளிவாக இல்லாவிட்டாலோ, தவறான தகவல்கள் வழங்கப்பட்டாலோ, உறுப்பினர் பதிவு நிராகரிக்கப்படும்.

சட்ட நண்பன் இயக்கம் பதவி, லாபம், தனிப்பட்ட பயன், தனிநபர் பிரச்சனைகளுக்கான ஆலோசனை ஆகியவற்றுக்கான அமைப்பு அல்ல. பொதுமக்களின் நலன், ஒரு ஊரின் பொதுப் பிரச்சனை, ஒரு கிராமத்தின் தேவைகள், பொதுநல உரிமைகள், அரசு அலுவலக நடைமுறைகள் போன்ற பொதுத் தேவைகளுக்கான சட்ட விழிப்புணர்வு மற்றும் பொதுவான வழிகாட்டுதல்களை மட்டுமே இந்த இயக்கம் வழங்கும்.

சட்ட நண்பன் இயக்கத்தின் கொள்கை, நோக்கம், பணிச்செயல்பாடு ஆகியவற்றை புரிந்து கொண்டு, எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் சட்ட விழிப்புணர்வு மற்றும் பொதுநலப் பணிகளில் உண்மையாக பங்களிக்க விரும்புபவர்கள் மட்டுமே உறுப்பினராக சேரலாம்.

ஒருவர் ஒரு சமூக நோக்கத்திற்காக ஒரு அமைப்பில் உண்மையாக செயல்பட்டால் போதும். பல அமைப்புகளில் பெயர் மட்டும் வைத்துக்கொண்டு செயல்படாமல் இருப்பவர்களை சட்ட நண்பன் இயக்கம் தேடவில்லை. இந்த இயக்கத்தின் நோக்கத்தோடு நேர்மையாக பயணிக்க விரும்புபவர்களுக்கே உறுப்பினர் சேர்க்கை வழங்கப்படும்.

தற்போது உறுப்பினர் சேர்க்கை மட்டுமே நடைபெறுகிறது. பின்னர் தேவைக்கேற்ப மாவட்ட வாரியாக குழுக்கள் உருவாக்கப்படும். அந்தந்த மாவட்டங்களில் செயல்பாடு, ஒழுக்கம், பொறுப்புணர்வு, பொதுநல ஆர்வம் ஆகியவற்றின் அடிப்படையில் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

உறுப்பினர் பதிவு செய்யப்பட்ட பிறகு, விவரங்கள் சரியாக இருந்தால் உறுப்பினர் அடையாள அட்டை மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும். இணையதளத்தில் சில நேரங்களில் server பிரச்சனை இருந்தால், சிறிது நேரம் கழித்து மீண்டும் முயற்சி செய்யலாம்.

சட்ட விழிப்புணர்வுக்காக ஒன்றிணைவோம்.
உரிமைக்கு குரல் கொடுப்போம்!
உறவுக்கு கரம் கொடுப்போம்!

உறுப்பினர் சேர்க்கை இணைப்பு:
https://sattananban.org/join-us

சுப. கார்த்திகேயன் MBA., MA., LLM
தலைவர்
சட்ட நண்பன்

18/05/2026
தமிழ்நாட்டில் போதைப்பொருள் வேரோடு ஒழிக்கப்பட வேண்டும்!தமிழ்நாட்டின் எதிர்காலம் இளைஞர்களின் கையில் உள்ளது. ஆனால், அந்த இள...
18/05/2026

தமிழ்நாட்டில் போதைப்பொருள் வேரோடு ஒழிக்கப்பட வேண்டும்!

தமிழ்நாட்டின் எதிர்காலம் இளைஞர்களின் கையில் உள்ளது. ஆனால், அந்த இளைஞர்களின் எதிர்காலத்தையே அழிக்கும் மிகப்பெரிய சமூக ஆபத்தாக போதைப்பொருள் பரவல் மாறிக்கொண்டிருக்கிறது.

பள்ளி, கல்லூரி, பேருந்து நிலையம், ரயில் நிலையம், விடுதி பகுதிகள், வேலை தேடி வரும் இளைஞர்கள் தங்கும் இடங்கள், தொழிற்சாலை பகுதிகள், நகர்ப்புற குடியிருப்புகள் — இப்படி பல இடங்களில் போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாடு பற்றிய அச்சம் பொதுமக்களிடம் அதிகரித்து வருகிறது.

போதைப்பொருள் என்பது ஒருவரின் உடல்நலத்தை மட்டும் அழிப்பதில்லை.
அது ஒரு குடும்பத்தை அழிக்கிறது.
ஒரு மாணவனின் கல்வியை அழிக்கிறது.
ஒரு இளைஞனின் வேலை வாய்ப்பை அழிக்கிறது.
ஒரு சமூகத்தின் அமைதியையே சிதைக்கிறது.

தேசிய ஜனநாயகக் கட்சி சார்பாக முதல்வர் விஜய் அவர்களுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் எங்கள் வலியுறுத்தல்:

போதைப்பொருள் விற்பனை செய்யும் நபர்கள், பள்ளி–கல்லூரி மாணவர்களை குறிவைக்கும் கும்பல்கள், இளைஞர்களை சிக்கவைக்கும் வலைப்பின்னல்கள் மீது இரக்கம் இன்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிறு அளவில் பிடிபடும் நபர்களை மட்டும் கைது செய்து செய்தி வெளியிடுவது போதாது. அதன் பின்னால் இருக்கும் பெரிய வியாபாரிகள், விநியோக சங்கிலிகள், பண உதவி செய்பவர்கள், பாதுகாப்பு கொடுப்பவர்கள், அரசியல் அல்லது அதிகார தொடர்பு உள்ளவர்கள் யார் இருந்தாலும், அவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரி, பேருந்து நிலையம், ரயில் நிலையம், விடுதி பகுதிகள், கடற்கரைப் பகுதிகள், தொழிற்சாலை பகுதிகள் ஆகிய இடங்களில் நிரந்தர போதைப்பொருள் தடுப்பு கண்காணிப்பு பிரிவு செயல்பட வேண்டும்.

காவல்துறை சோதனை, ரகசிய கண்காணிப்பு, CCTV, பள்ளி–கல்லூரி விழிப்புணர்வு முகாம், பெற்றோர் விழிப்புணர்வு, மாணவர்களுக்கான பாதுகாப்பான புகார் முறை ஆகியவை ஒரே நேரத்தில் செயல்படுத்தப்பட வேண்டும்.

போதைப்பொருள் பழக்கத்தில் சிக்கிய மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு மருத்துவ சிகிச்சை, ஆலோசனை, மறுவாழ்வு உதவி வழங்கப்பட வேண்டும். ஆனால் போதைப்பொருள் விற்பனை செய்து இளைஞர்களின் வாழ்க்கையை அழிக்கும் கும்பல்களுக்கு எந்த சலுகையும் இருக்கக்கூடாது.

தமிழ்நாடு அரசு இந்த பிரச்சனையை சாதாரண சட்டம்–ஒழுங்கு பிரச்சனையாக பார்க்காமல், இளைஞர் எதிர்கால பாதுகாப்பு பிரச்சனையாக பார்க்க வேண்டும்.

போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு வேண்டும்.
இளைஞர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும்.
விற்பவர்களுக்கு கடுமையான தண்டனை; பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு உதவி வேண்டும்.

இப்படிக்கு,
சுப. கார்த்திகேயன் MBA., MA., LLM
தலைவர்
தேசிய ஜனநாயகக் கட்சி

#தேசியஜனநாயககட்சி #சுபகார்த்திகேயன் #போதைப்பொருள்_ஒழிப்பு #போதைஇல்லா_தமிழ்நாடு #இளைஞர்கள்_பாதுகாப்பு #மாணவர்கள்_பாதுகாப்பு #தமிழ்நாடு

சிறைச்சாலைகள் தண்டனைக்கான இடம் மட்டுமல்ல; மனிதர்களை திருத்தி மீண்டும் சமூகத்தில் நல்லவர்களாக மாற்ற வேண்டிய இடம்!ஒருவர் க...
17/05/2026

சிறைச்சாலைகள் தண்டனைக்கான இடம் மட்டுமல்ல; மனிதர்களை திருத்தி மீண்டும் சமூகத்தில் நல்லவர்களாக மாற்ற வேண்டிய இடம்!

ஒருவர் குற்றம் செய்து சட்டப்படி தண்டிக்கப்பட்டு சிறைச்சாலைக்கு சென்றால், அவர் அங்கிருந்து வெளியே வரும் போது மீண்டும் குற்ற வாழ்க்கைக்கு திரும்பாமல், மனம் திருந்தி, அமைதியான, ஒழுக்கமான, நேர்மையான வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என்பதே சிறைச்சாலையின் அடிப்படை நோக்கம்.

ஆனால் பல இடங்களில் சிறைச்சாலை நிர்வாகம் குறித்து வெளியாகும் குற்றச்சாட்டுகள் மிகவும் கவலைக்குரியதாக உள்ளன.

சிறைச்சாலைக்குள் பொருட்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறதா?
பணம் உள்ளவர்களுக்கு ஒரு விதமான வசதி, பணம் இல்லாதவர்களுக்கு வேறு விதமான நிலைமையா?
சிறைக்குள் தடைசெய்யப்பட்ட பொருட்கள் எப்படி சென்று சேர்கின்றன?
சிறை கைதிகளின் உழைப்புக்குரிய வருமானம் முழுமையாக அவர்களின் கணக்கில் சேருகிறதா?
சிறை நிர்வாகத்தில் ஊழல், கமிஷன், மறைமுக வசூல் போன்றவை நடக்கிறதா?

இந்த கேள்விகளுக்கு அரசு தெளிவான பதில் அளிக்க வேண்டிய நேரம் இது.

சிறைச்சாலைக்குள் யார் இருந்தாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமம். பணக்காரர், ஏழை, செல்வாக்கு உள்ளவர், ஆதரவற்றவர் என்று வேறுபாடு காட்டக்கூடாது. சிறையில் உள்ள ஒவ்வொருவரும் சட்டப்படி மனிதநேயத்துடன் நடத்தப்பட வேண்டும்.

அதே நேரத்தில் சிறைச்சாலை என்பது குற்றங்களை உள்ளிருந்து இயக்கும் இடமாக மாறக்கூடாது. அங்கிருந்து வெளியுலக குற்றச் செயல்கள் நடத்தப்படுவதாக எங்காவது குற்றச்சாட்டு இருந்தால், அதனை அரசு மிகக் கடுமையாக விசாரிக்க வேண்டும்.

தேசிய ஜனநாயகக் கட்சி சார்பாக ஆளும் அரசுக்கும், முதல்வர் விஜய் அவர்களுக்கும் எங்கள் கோரிக்கை:

தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளும் முழுமையாக ஆய்வு செய்யப்பட வேண்டும்.

சிறைச்சாலைகளில் விற்கப்படும் பொருட்களின் விலைப்பட்டியல் அரசால் தெளிவாக நிர்ணயிக்கப்பட்டு, கைதிகளுக்கும் குடும்பத்தினருக்கும் தெரியும் வகையில் வெளிப்படையாக வைக்கப்பட வேண்டும்.

அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு எந்தப் பொருளும் விற்கப்படக்கூடாது. அப்படி நடந்தால் சம்பந்தப்பட்ட சிறை நிர்வாக அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிறை கைதிகள் உழைப்பின் மூலம் பெறும் வருமானம் அவர்களின் கணக்கில் முழுமையாகச் சேருகிறதா என்பதை அரசு கண்காணிக்க வேண்டும். அதில் கமிஷன், வெட்டு, மறைமுக வசூல் போன்றவை இருந்தால் உடனடி நடவடிக்கை அவசியம்.

சிறைச்சாலைகளுக்குள் தடைசெய்யப்பட்ட பொருட்கள் நுழைவதை முற்றிலும் தடுக்க வேண்டும். அதற்காக CCTV, டிஜிட்டல் கண்காணிப்பு, சுயாதீன ஆய்வு குழு, திடீர் சோதனை, புகார் முறை ஆகியவை வலுப்படுத்தப்பட வேண்டும்.

சிறைச்சாலைகள் தண்டனை இடமாக மட்டும் இருக்காமல், மனநலம் ஆலோசனை, தொழில் பயிற்சி, ஒழுக்கப் பயிற்சி, கல்வி, குடும்ப உறவு சீரமைப்பு, சமூக மறுவாழ்வு போன்ற திட்டங்கள் உண்மையாக செயல்படும் சீர்திருத்த மையங்களாக மாற்றப்பட வேண்டும்.

குற்றம் செய்தவர் தண்டனை அனுபவிக்க வேண்டும். ஆனால் அவர் வெளியே வரும் போது இன்னும் பெரிய குற்றவாளியாக அல்ல; சமூகத்திற்கு பயனுள்ள மனிதராக மாறி வர வேண்டும்.

அதற்காக சிறை நிர்வாகம் தூய்மையாகவும், ஊழலற்றதாகவும், மனிதநேயத்துடனும், சட்டப்படி ஒழுங்குடனும் செயல்பட வேண்டும்.

சிறைச்சாலைகளில் ஊழல் இருக்கக்கூடாது.
பணக்கார கைதி — ஏழை கைதி என்ற பாகுபாடு இருக்கக்கூடாது.
தடைசெய்யப்பட்ட பொருட்கள் உள்ளே செல்லக்கூடாது.
கைதிகளின் உழைப்புக்கான பணம் முழுமையாக அவர்களுக்கே சேர வேண்டும்.
சிறைச்சாலைகள் உண்மையான சீர்திருத்த மையங்களாக மாற வேண்டும்.

தமிழக அரசு சிறை நிர்வாகத்தை முழுமையாக ஆய்வு செய்து, வெளிப்படையான, மனிதநேயமான, ஊழலற்ற சிறைச்சாலை நிர்வாகத்தை உருவாக்க வேண்டும்.

இப்படிக்கு,
சுப.கார்த்திகேயன் MBA., MA., LLM
தலைவர்
தேசிய ஜனநாயகக் கட்சி

#தேசியஜனநாயககட்சி #சுபகார்த்திகேயன் #ஊழல்_ஒழிப்பு #சிறைச்சாலை_சீர்திருத்தம் #மனிதநேயம் #சட்டம்_அனைவருக்கும்_சமம் #தமிழ்நாடு

ஓட்டுநர்களை அச்சுறுத்தி லஞ்சம் வாங்கும் நடைமுறை முற்றிலும் தடுக்கப்பட வேண்டும்!இந்த நாட்டின் பொருளாதார இயக்கத்தில் மிக ம...
17/05/2026

ஓட்டுநர்களை அச்சுறுத்தி லஞ்சம் வாங்கும் நடைமுறை முற்றிலும் தடுக்கப்பட வேண்டும்!

இந்த நாட்டின் பொருளாதார இயக்கத்தில் மிக முக்கியமான பங்காற்றுபவர்கள் ஓட்டுநர்கள்.

ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு உணவுப் பொருட்கள், மருந்துகள், கட்டுமானப் பொருட்கள், விவசாயப் பொருட்கள், தொழிற்சாலை உற்பத்திகள், அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் மக்களிடம் சேர வேண்டுமானால், அதற்கு சரக்கு வாகனங்களும், அந்த வாகனங்களை ஓட்டும் ஓட்டுநர்களும் மிகவும் அவசியம்.

ஒரு நாள் கூட ஓட்டுநர்கள் வாகனங்களை இயக்காமல் நின்றுவிட்டால், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை முதல் வணிகம், விவசாயம், தொழில், மருத்துவ சேவை வரை பல துறைகள் பாதிக்கப்படும். அந்த அளவுக்கு முக்கியமான பொறுப்பை ஏற்றுள்ள ஓட்டுநர்கள், சாலையில் அச்சத்துடன் அல்ல, நிம்மதியுடன் பயணிக்க வேண்டும்.

வாகன சோதனை அவசியம்.
வாகன ஆவணங்கள் சரியாக உள்ளதா?
லைசென்ஸ் உள்ளதா?
இன்சூரன்ஸ், பெர்மிட், FC, வரி, சரக்கு ஆவணங்கள் சரியாக உள்ளதா?
அளவுக்கு மீறி சரக்கு ஏற்றப்பட்டுள்ளதா?
தவறான பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா?
திருட்டு வாகனம் பயன்படுத்தப்படுகிறதா?

இவை அனைத்தையும் காவல்துறை, RTO மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் முறையாக சோதனை செய்வது அரசின் கடமை.

ஆனால், வாகன சோதனை என்ற பெயரில் ஓட்டுநர்களை அச்சுறுத்தி, மிரட்டி, லஞ்சம் வாங்கும் குற்றச்சாட்டுகள் எங்கு இருந்தாலும், அது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்.

தவறு இருந்தால் சட்டப்படி அபராதம் விதியுங்கள்.
ஆவணங்கள் சரியில்லையெனில் அதிகாரப்பூர்வமாக வழக்கு பதிவு செய்யுங்கள்.
அளவுக்கு மீறி சரக்கு ஏற்றப்பட்டிருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுங்கள்.
லைசென்ஸ், பெர்மிட், இன்சூரன்ஸ் இல்லையெனில் விதிமுறைகளின்படி அபராதம் விதியுங்கள்.

ஆனால், எந்த சூழலிலும் ஒரு ரூபாய் கூட லஞ்சமாக வாங்கப்படக்கூடாது.

லஞ்சம் வாங்கும் நடைமுறை இருந்தால்தான் தவறு செய்பவர்கள் தப்பிக்கிறார்கள். அதிகாரப்பூர்வ அபராதம் விதித்தால் அது அரசுக்கு வருவாய். ஆனால் லஞ்சம் வாங்கப்பட்டால் அது அரசுக்கும் இழப்பு, சட்டத்துக்கும் அவமதிப்பு, ஓட்டுநர்களுக்கும் அநீதி.

சரியான ஆவணங்களுடன் பயணம் செய்யும் ஓட்டுநர்கள் “போலீஸ் பிடிப்பார்களோ?”, “RTO மிரட்டுவார்களோ?”, “காசு கேட்பார்களோ?” என்ற பயத்தில் செல்ல வேண்டிய நிலை இருக்கக்கூடாது.

ஓட்டுநர்கள் குற்றவாளிகள் அல்ல.
அவர்கள் இந்த நாட்டின் அத்தியாவசிய சேவை தூண்கள்.

தேசிய ஜனநாயகக் கட்சி சார்பாக ஆளும் அரசுக்கு எங்கள் கோரிக்கை:

வாகன சோதனை மையங்கள், சோதனைச் சாவடிகள், நெடுஞ்சாலை கண்காணிப்பு பகுதிகள் அனைத்தும் CCTV கண்காணிப்பில் கொண்டு வரப்பட வேண்டும்.

வாகன சோதனையின் போது அதிகாரிகள் கட்டாயமாக அடையாள அட்டை அணிய வேண்டும். அதிகாரப்பூர்வ அபராதம் விதிக்கப்பட்டால் உடனடியாக ரசீது அல்லது e-challan வழங்கப்பட வேண்டும்.

ஓட்டுநர்களிடம் பணமாக வசூல் செய்யும் நடைமுறை முற்றிலும் தடுக்கப்பட வேண்டும். அனைத்து அபராதங்களும் டிஜிட்டல் முறையில் மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும்.

காவல்துறை, RTO, போக்குவரத்து அதிகாரிகள் யாராக இருந்தாலும், ஓட்டுநர்களிடம் லஞ்சம் கேட்டது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால், அவர்கள்மீது கடுமையான துறை நடவடிக்கை மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஓட்டுநர்கள் புகார் அளிக்க தனி அவசர எண், WhatsApp புகார் மையம், ஆன்லைன் புகார் தளம் ஆகியவை தெளிவாக அறிவிக்கப்பட வேண்டும். புகார் அளிக்கும் ஓட்டுநர்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும்.

சரியான ஆவணங்களுடன் செல்லும் ஓட்டுநர்களை தேவையில்லாமல் நிறுத்தி தொந்தரவு செய்யக்கூடாது. ஆனால் தவறு செய்தவர்களுக்கு சட்டப்படி அபராதம் விதிப்பதில் எந்த சலுகையும் இருக்கக்கூடாது.

சட்டம் இருக்க வேண்டும்.
சோதனை இருக்க வேண்டும்.
பாதுகாப்பு இருக்க வேண்டும்.
ஆனால் லஞ்சம் இருக்கக்கூடாது.

ஓட்டுநர்களுக்கு மரியாதை வேண்டும்.
ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு வேண்டும்.
ஓட்டுநர்கள் நிம்மதியாக வாகனம் ஓட்டும் சூழல் வேண்டும்.

இந்த நாட்டின் சாலைப் போக்குவரத்தையும், பொருளாதார இயக்கத்தையும் தாங்கி நிற்கும் ஓட்டுநர்களின் கண்ணீரையும், பயத்தையும், அவமானத்தையும் அரசு கவனிக்க வேண்டும்.

வாகன சோதனை என்ற பெயரில் நடக்கும் லஞ்ச நடைமுறையை முற்றிலும் தடுத்து, வெளிப்படையான, சட்டப்பூர்வமான, மனிதநேயமான சோதனை முறையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

தவறு இருந்தால் அபராதம் விதியுங்கள்;
லஞ்சம் கேட்காதீர்கள்.
ஓட்டுநர்களை மிரட்டாதீர்கள்.
சட்டத்தை மதிக்கவும், மனிதனை மதிக்கவும்.

இப்படிக்கு,
சுப. கார்த்திகேயன் MBA., MA., LLM
தலைவர்
தேசிய ஜனநாயகக் கட்சி

#தேசியஜனநாயககட்சி #சுபகார்த்திகேயன் #ஓட்டுநர்கள்_பாதுகாப்பு #லஞ்சம்_ஒழிக்கவேண்டும் #வாகனசோதனை #சட்டப்படி_அபராதம் #தமிழ்நாடு

அரசு பள்ளி, அரசு கல்லூரி, பேருந்து நிலையங்களில் மாணவிகள் பாதுகாப்புக்கு சிறப்பு காவல் கண்காணிப்பு வேண்டும்!பள்ளி, கல்லூர...
17/05/2026

அரசு பள்ளி, அரசு கல்லூரி, பேருந்து நிலையங்களில் மாணவிகள் பாதுகாப்புக்கு சிறப்பு காவல் கண்காணிப்பு வேண்டும்!

பள்ளி, கல்லூரி, பேருந்து நிலையம் போன்ற இடங்கள் மாணவ, மாணவிகள் பாதுகாப்பாக சென்று வர வேண்டிய இடங்கள். ஆனால் பல இடங்களில் காலை பள்ளி/கல்லூரிக்கு செல்லும் நேரத்திலும், மாலை வீடு திரும்பும் நேரத்திலும், கல்வி நிலையத்துடன் எந்த தொடர்பும் இல்லாத சில நபர்கள் அங்கு தேவையில்லாமல் சுற்றி நிற்பது, மாணவிகளிடம் பேச முயற்சிப்பது, காதல் தொந்தரவு கொடுப்பது, பின்தொடர்வது, வாகனங்களை வேகமாக ஓட்டி அச்சுறுத்துவது போன்ற சம்பவங்கள் நடப்பதை நாம் தொடர்ந்து பார்க்கிறோம்.

இது சாதாரண விஷயம் அல்ல.
இது மாணவிகளின் கல்வி, மனநிலை, பாதுகாப்பு, எதிர்காலம் ஆகியவற்றை நேரடியாக பாதிக்கும் மிக முக்கியமான சமூகப் பிரச்சினை.

பல பெண் குழந்தைகள் இத்தகைய தொந்தரவுகளை வீட்டில் சொல்லத் தயங்குகிறார்கள். “சொன்னால் படிக்க விடமாட்டார்களோ?” என்ற பயத்தில் அமைதியாக தாங்கிக்கொள்கிறார்கள். அந்த அமைதியே சில நேரங்களில் பெரிய ஆபத்துகளுக்கும், மன அழுத்தத்திற்கும், தவறான நம்பிக்கைகளுக்கும், ஒருதலைக் காதல் தொந்தரவுகளுக்கும் வழிவகுக்கும் சூழல் உருவாகிறது.

பெண் குழந்தைகள் படிக்க வருகிறார்கள்;
அவர்களின் கவனம் படிப்பில் இருக்க வேண்டும்.
அவர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும்.

அரசு பள்ளி, அரசு கல்லூரி, பேருந்து நிலையம், மாணவர்கள் அதிகம் பயன்படுத்தும் சாலைகள், பஸ் ஸ்டாப்புகள் போன்ற இடங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் காவல்துறை சிறப்பு கண்காணிப்பு கட்டாயமாக இருக்க வேண்டும்.

தேசிய ஜனநாயகக் கட்சி சார்பாக ஆளும் அரசுக்கு எங்கள் கோரிக்கை:

அரசு பள்ளி, அரசு கல்லூரி பகுதிகளில் காலை வருகை நேரம் மற்றும் மாலை விடுப்பு நேரங்களில் நிரந்தர காவல் கண்காணிப்பு ஏற்படுத்த வேண்டும்.

கல்வி நிலையங்களின் முன்பு தேவையில்லாமல் சுற்றி நிற்கும் வெளிநபர்கள் மீது உடனடி விசாரணை செய்து, சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாணவிகளை பின்தொடருதல், தொந்தரவு செய்தல், கட்டாயமாக பேச முயற்சித்தல், வாகனத்தில் சுற்றி அச்சுறுத்தல், சமூக வலைதளத்தில் தொடர்பு கொண்டு மிரட்டல் போன்ற செயல்கள் மீது பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கை பின்பற்றப்பட வேண்டும்.

ஒவ்வொரு அரசு பள்ளி, அரசு கல்லூரி அருகிலும் CCTV, பெண்கள் காவலர் ரோந்து, அவசர புகார் எண், மாணவிகளுக்கான நம்பகமான புகார் பெட்டி, ஆசிரியர்–காவல்துறை இணைப்பு முறை ஆகியவை செயல்படுத்தப்பட வேண்டும்.

இது மாணவர்களின் சாதாரண நட்பு அல்லது கல்வி சூழலை கட்டுப்படுத்தும் கோரிக்கை அல்ல. மாணவிகளுக்கு தொந்தரவு, அச்சுறுத்தல், பின்தொடர்தல், வெளிநபர்களின் அத்துமீறல் ஆகியவற்றை தடுக்க வேண்டும் என்பதற்கான பாதுகாப்பு கோரிக்கை.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளி, அரசு கல்லூரிகளில் நம்பிக்கையுடன் சேர்க்க வேண்டும் என்றால், கல்வி தரத்துடன் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும்.

பெண் குழந்தையின் கல்வி பாதுகாக்கப்பட வேண்டும்.
பெண் குழந்தையின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்.
பெண் குழந்தையின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும்.

அரசு பள்ளி, அரசு கல்லூரி, பேருந்து நிலையங்களில் மாணவிகள் பாதுகாப்புக்காக காவல்துறை தீவிர கண்காணிப்பை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

— தேசிய ஜனநாயகக் கட்சி சார்பாக கோரிக்கை

#தேசியஜனநாயககட்சி #மாணவிகள்_பாதுகாப்பு #பெண்கள்_பாதுகாப்பு #கல்வி_பாதுகாப்பு #தமிழ்நாடு

Address

Namakkal
637001

Alerts

Be the first to know and let us send you an email when வழக்கறிஞர் சுப.கார்த்திகேயன் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to வழக்கறிஞர் சுப.கார்த்திகேயன்:

Share